விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகினிக்கு பேய் பிடித்து இருக்கிறது என்று பார்வதியிடம் விஜயா சொன்னார். ரோகினி அப்பாவுடைய ஆத்மா தான் வந்திருக்கும் என்று சொல்லி சாமியாரை வீட்டிற்கு வர வைத்தார்கள். அவர், விஜயாவை பார்த்தவுடன் மொத்த கெட்ட ஆத்மா இவருடைய உடம்பில் தான் இருக்கிறது என்று சொன்னவுடன் எல்லோருமே ஷாக் ஆகி இருந்தார்கள். பின் அந்த சாமியார், பூஜைக்கு தேவையான எல்லா ஏற்பாட்டையும் செய்து ரோகினியை ஒரு வட்டத்திற்கு உட்கார வைத்தார். இவர் போலி சாமியார் என்று ரோகினி கண்டுபிடித்து விட்டார். இருந்தாலும், வெளியில் உண்மை சொல்ல முடியாமல் தவித்தார்.
உடனே அந்த சாமியார் பேய் ஓட்டுகிறேன் என்று ரோகினியை குச்சியால் அடித்தார். வலி தாங்க முடியாமல் ரோகினி கத்திக் கொண்டிருந்தார். தொடர்ந்து இப்படியே மூன்று நாள் குச்சியால் அடிக்க வேண்டும் என்று மனோஜிடம் சொன்னார். இன்னொரு பக்கம் முத்து, சவாரிக்கு ஒரு நபரை அழைத்துக் கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப அவசரம் என்பதால் ட்ராபிக் வீதியை மீறி முத்து வண்டியை ஒட்டி சென்றார். இதை பார்த்த அந்த ட்ராபிக் போலீஸ் முத்துவை துரத்தி சென்று சண்டை வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸ், முத்துவின் வண்டி சாவியை பிடுங்கி விட்டார். இதைப் பற்றி முத்து, மீனாவிடம் சொல்லி புலம்பி இருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அதற்குப்பின் மீனா, அந்த டிராபிக் போலீஸ் வீட்டிற்கு சென்றார். நேற்று எபிசோட்டில் மீனா, எஸ்.ஐ மனைவியிடம் நடந்ததை சொல்ல, அவருமே சரியும் என்று சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் ரோகினி தூங்கிக் கொண்டிருந்த போது அவருடைய காலில் குச்சியால் மனோஜ் அடித்தார். இதனால் தூக்கத்திலிருந்து எழுந்த ரோகினி, பயங்கரமாக கதற, இரண்டு பேருமே பயந்து கொண்டு வெளியே வந்து விட்டார்கள்.
இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற முத்துவிடம் எஸ்.ஐ நடந்ததை பற்றி விசாரித்தார். உடனே அவர், அவனை பழிவாங்க தேவையில்லாத வேலையெல்லாம் செய்யாதே என்ற டிராபிக் போலீஸிடம் திருப்பி சாவி கொடுக்க சொன்னார்.
நேற்று எபிசோட்:
முத்துவும் சந்தோஷப்பட்டார். பின் எஸ்ஐ, இதே மாதிரி செய்யக்கூடாது . மீனா என் வீட்டில் பேசியதால் தான் நான் ஒத்துக் கொண்டேன் என்றார். மறுநாள் காலையில் ஸ்ருதி- ரவி இருவரும் தங்களுடைய முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட பங்க்ஷன் ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்காக இன்விடேஷனை வீட்டில் கொடுத்தார்கள். அதில் விஜயா நடனம் ஆடுகிறார், டெக்கரேஷன் வொர்கிங் மீனா செய்கிறார் என்று சொன்னார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் தாத்தாவின் உறவினர், நீங்கள் அனுப்பிய நபர் தான் போனை தவற விட்டவர் என்று சொன்னவுடன் முத்துவிற்கு பயங்கர கோபம் வருகிறது.
இன்றைய எபிசோட்:
இதை மீனாவுடன் சொல்கிறார். ஆனால், மீனாவால் வித்யா தான் போனை திருடினார் என்று நம்பவே முடியவில்லை. ரோகினி செய்ய சொல்லி வித்யா செய்து இருப்பார் என்றார் முத்து. பின் மீனா, பங்சன் நேரத்தில் ப்ரச்சனை வேண்டாம் என்று சொல்கிறார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளாமல் வித்யாவின் வீட்டிற்கு செல்கிறார். முத்துவை பார்த்தவுடன் வித்யா ஷாக் ஆகிறார். பின் முத்து, தன்னுடைய மொபைலை காண்பித்து விசாரிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
உஷாரான வித்யா, ஏதேதோ காரணங்களை சொல்லி சமாளிக்கிறார். ஆனால், முத்து ஏற்றுக்கொள்ளவே இல்லை. முத்துவும் விடாமல் உண்மையை வர வைக்க பேசுகிறார். வித்யா, தெளிவாக பொய் சொல்கிறார். இதனால ஏமாற்றத்துடன் வீட்டிற்கு வந்த முத்து, நடந்ததை மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு ரோகிணிக்கு ஒரே சந்தோஷம். பின் ரோகினி, தன்னுடைய தோழியை சந்தித்து நன்றி சொல்கிறார். அவருமே அவருக்கு ஆறுதல் சொன்ன உடன் இருவருக்கும் இடையே இருந்த சண்டை விலகி விட்டது. இத்துடன் சீரியல் முடிகிறது.