விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து-மீனா இருவரும் சத்யாவை சந்தித்து ரோகினி கடன் வாங்கிய விஷயத்தை பற்றி விசாரிக்க சொன்னார்கள். இன்னொரு பக்கம் ரோகினி, கதிர் விசயத்தை சொல்லி சிட்டியிடம் கண்டிபிடிக்க சொன்னார். கடந்த வாரம் மலேசியாவில் இருந்து வந்த வயதானவர்களை முத்து சவாரிக்கு அழைத்து வந்தார். அவர்கள் தங்களுக்கு 60-வது கல்யாணம் நாள் என்று சொன்னவுடன் முத்து, மீனாவிடம் சொல்லி கோயிலில் ஏற்பாடு செய்தார். இன்னொரு பக்கம் சிட்டி, மீனா அம்மா வேலை செய்யும் கோவிலுக்கு சென்று கதிர் வீடியோவை கேட்க, அவர்கள் முடியாது என்று மறுத்தார்கள். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா, சத்யாவிற்கு சந்தேகம் வந்தது.
இதைப் பற்றி அவர்கள் மீனாவிடமும் சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து முத்து வந்த உடன் கோயிலில் அந்த வயதானவர்களுக்கு பூஜை நடந்தது. அதற்குப்பின் முத்து, இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்கலாம் என்று சொன்னார். உடனே மீனா, இவர்களும் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் தானே, ரோகினி அப்பாவை பற்றி விசாரிக்கலாம் என்றார். இன்னொரு பக்கம் சிட்டி, கோயிலில் வீடியோ கிடைக்கவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று சொன்னார். அதற்கு ரோகினி, உன்னை யாராவது பார்த்து விட்டார்களா? என்று கேட்க, மீனாவின் அம்மா-சத்யா எல்லாம் பார்த்தார்கள் என்று சொன்னவுடன் ரோகினி பயந்தார்.
சிறகடிக்க ஆசை:
மீனா, வீட்டில் தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது விஜயா, யாருக்கு சமைக்கிறாய்? என்று கேட்டதற்கு, மலேசியாவில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்காகத்தான் செய்கிறேன் என்று சொன்னவுடன் கோபப்பட்டு சண்டை போட்டார். உடனே அண்ணாமலை, என்னிடம் முத்து கேட்டு தான் செய்கிறான் என்றவுடன் விஜயா எதுவும் பேசாமல் சென்று விட்டார். அந்த சமயம் பார்த்து மலேசியாவில் இருந்து வந்தவர்களை முத்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்களை பார்த்து உபசரித்து அண்ணாமலை விசாரித்தார்.
கடந்த வாரம் எபிசோட்:
உடனே விஜயா, என்னுடைய மூத்த மருமகளும் மலேசியா தான் என்று ரோகினியை அழைத்தார். ரோகினி, என்ன செய்வது என்று புரியாமல் உள்ளுக்குள்ளே பயந்து கொண்டே இருந்தார். எல்லோருமே ரோகினுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ரோகினி, பல் வலி என்று வீங்கியது போல் டிராமா செய்து அங்கு இருந்து எஸ்கேப் ஆக பார்த்தார் . இது எல்லாம் பார்த்து முத்துவிற்கு சந்தேகம் தான் வந்தது. ஆனால், ரோகினி உடன் ஸ்ருதி ஹாஸ்பிடலுக்கு போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து முத்துவிற்கு ரோகினி மீது நிறைய சந்தேகம் வருகிறது. இதைப்பற்றி மீனாவிடம் சொல்ல, அவருமே ரோகினி மீது தான் சந்தேகப்படுகிறார். இன்னொரு பக்கம் ரோகினி, ஸ்ருதியை கழட்டிவிட்டு எஸ்கேப்பாக பல முயற்சி செய்கிறார். ஆனால், ஸ்ருதி விடாமல் அவருடன் தான் இருக்கிறார். பின் ரோகினியை செக் பண்ணி பார்த்த டாக்டர், அவருக்கு சொத்தைப்பல் இருக்கிறது. பிடுங்கிவிட வேண்டும் என்று சொன்னவுடன் ரோகினி பயந்து விடுகிறாள். ஸ்ருதி எதுவாக இருந்தாலும் செய்யுங்கள் என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
ஒரு வழியாக பல்லை டாக்டரும் பிடுங்கி விட்டதால் ரோகினிக்கு உண்மையிலேயே பல்வலி அதிகமாகி வீக்கம் வந்துவிடுகிறது. இன்னொரு பக்கம் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் கிளம்பி விடுகிறார்கள். அதற்கு பின் தான் ரோகினியும் வீட்டிற்கு வருகிறார். ஹாஸ்பிடல் நடந்ததை ஸ்ருதி சொன்னவுடன் எல்லோருமே சிரிக்கிறார்கள். ஆனால், ரோகினி தப்பித்து விட்டோம் என்று இருக்கிறார். முத்துவிற்கு இன்னும் சந்தேகம் அதிகமாகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.