-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

அடுத்தடுத்து ரோகினிக்கு காத்திருந்த பிரச்சனைகள், முத்து என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை

0
44

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மீனா, சிட்டியிடம் நீங்கள் ஏன் கடன் வாங்கி இருக்கிறீர்கள்? என்று கேட்டவுடன் ரோகினிக்கு முகமே மாறி வியர்த்து விட்டது. இன்னொரு பக்கம் முத்து, சிட்டியிடம் ரோகினி பணம் வாங்கி இருக்கும் விஷயத்தை மனோஜிடம் கேட்டார். ஆனால், மனோஜ் அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் திட்டி விட்டு போனார். பின் இதைப் பற்றி மனோஜ், ரோகினி இடம் கேட்க அவரால் எதுவுமே பதில் சொல்ல முடியவில்லை. பின் ஏதோ சொல்லி ரோகினி சமாளித்து விட்டார். இன்னொரு பக்கம் மீனா-முத்து இருவருக்கும் ரோகினி மீது சந்தேகம் வருகிறது.

-விளம்பரம்-

இந்த வாரம் கதிரை கண்டுபிடிப்பதற்காக நடிகரின் வீட்டிற்கு முத்து-மீனா இருவருமே போனார்கள். அப்போது முத்து, பங்களா விஷயத்தை பேசிய உடன் அந்த நடிகர், கதிர் பற்றி சொன்னார். உடனே முத்து, தன்னுடைய அண்ணன் ஏமாந்த உண்மையை எல்லாம் சொல்ல, அவர் ஆறுதல் சொல்லி கதிர் பற்றி தனக்கு தெரிந்த விஷயத்தை சொன்னார். அந்த சமயம் பார்த்து சிந்தாமணி வந்தார். பின் அந்த நடிகர், மீனா-சிந்தாமணிக்கு வேலையை பிரித்து கொடுத்தார். இதனால் கோபத்தில் சிந்தாமணி, மீனாவுக்கு சவால் விட, பதிலுக்கு பதில் முத்துவும் சவால் விட்டார்.

சிறகடிக்க ஆசை:

இன்னொரு பக்கம் வீட்டில் மீனா, கதிர் விஷயமாக தான் நாங்கள் போயிருந்தோம். கூடிய விரைவில் கண்டுபிடிப்போம் என்று சொன்னவுடன் ரோகினி, இனி நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் அதை விடுங்கள் என்று சொன்னார். நேற்று எபிசோட்டில் மீனா, எதற்கு வேண்டாம் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டவுடன் ரோகினி, இனிமேல் கதிரை நாங்கள் கண்டுபிடித்துக் கொள்கிறோம். முத்து கண்டுபிடித்தாலுமே மனோஜை மட்டம் தட்டி பேசுவார் என்று சொன்னவுடன் முத்து சண்டை போட்டார். அதற்குப்பின் முத்து- மீனா இருவருமே ரோகினி சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

அதற்கு பின் முத்து-மீனா இருவரும் சத்யாவை சந்தித்து ரோகினி கடன் வாங்கிய விஷயத்தை பற்றி விசாரிக்க சொன்னார்கள். இன்னொரு பக்கம் வித்யாவின் வீட்டிற்கு சென்ற ரோகினி, சிட்டியிடம் கடன் வாங்கிய விஷயம் முத்துவிற்கு தெரிந்து விட்டது. இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லி சிட்டியை தனியாக பேச அழைத்தார். அப்போது ரோகினி, கதிர் விசயத்தை சொல்ல, இது தான் சந்தர்ப்பம் என்று சிட்டி நினைத்தார். பின் ரோகினி, கோயிலில் அவனுடைய வீடியோ ரெக்கார்டு ஆகி இருக்கும். அவனை அடையாளம் காண்பிக்கிறேன் கண்டுபிடியுங்கள் என்று சொல்ல, சிட்டியும் ஒத்து கொண்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில் மலேசியாவில் இருந்து வந்த வயதானவர்களை முத்து சவாரிக்கு அழைத்து செல்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு 60-வது கல்யாணம் நாள் என்று சொன்னவுடன் முத்து மீனாவிடம் சொல்லி கோயிலில் ஏற்பாடு செய்கிறார். இன்னொரு பக்கம் சிட்டி, மீனா அம்மா வேலை செய்யும் கோவிலுக்கு சென்று கதிர் வீடியோவை கேட்க, அவர்கள் முடியாது என்று மறுக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து மீனாவின் அம்மா, சத்யாவிற்கு சந்தேகம் வருகிறது. இதைப் பற்றி அவர்கள் மீனாவிடமும் சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து முத்து வந்த உடன் கோயிலில் அந்த வயதானவர்களுக்கு பூஜை நடக்கிறது. அதற்குப்பின் முத்து, இவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து வைக்கலாம் என்று சொல்கிறார். உடனே மீனா, இவர்களும் மலேசியாவில் இருந்து வந்தவர்கள் தானே, ரோகினி அப்பாவை பற்றி விசாரிக்கலாம் என்றார். அதற்கு முத்து, சூப்பர் ஐடியா என்கிறார். இன்னொரு பக்கம் சிட்டி, கோயிலில் வீடியோ கிடைக்கவில்லை. நீங்களே ஏற்பாடு செய்து கொடுங்கள் என்று சொல்கிறார். ரோகினி, உன்னை யாராவது பார்த்து விட்டார்களா? என்று கேட்க, மீனாவின் அம்மா-சத்யா எல்லாம் பார்த்தார்கள் என்று சொன்னவுடன் ரோகினி பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news