விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சுருதி, மனோஜ்-முத்து இடையே இருக்கும் சண்டையை தீர்ப்பதற்கு ஒரு கேமை விளையாட வைத்தார். நேற்று எபிசோட்டில் சிந்தாமணி, டிரைவிங் கத்து கொள்ள முத்து வீட்டிற்கு வந்தார். ஆனால், அது மீனாவின் வீடு தெரியாமல் சிந்தாமணி வந்து விட்டார். பின் அவர் மீனா, முத்துவை பார்த்தவுடன் கிளம்ப பார்த்தார். உடனே முத்து, உங்களுக்கும் மீனாவுக்கும் தான் போட்டி. எனக்கும் உங்களுக்கும் இல்லை. நான் நன்றாக சொல்லி தருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், சிந்தாமணி பார்க்கலாம் என்று கிளம்பி விட்டார்.
இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டில் வித்யா-ரோகினி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து அங்கு கதிர் வந்தார். அவரை பார்த்தவுடன் கோபத்தில் ரோகினி அவரிடம் சண்டை போட்டார். உடனே கதிர், ரோகினியை தள்ளி விட்டு தப்பித்து ஓடி இருந்தார். பின்னாடியே ரோகினியும் துரத்திக் கொண்டு சென்றார். ஆனால், கதிர் எப்படியோ எஸ்கேப் ஆகி விட்டார். பின் இதைப்பற்றி மனோஜிடம் ரோகினி சொன்னார். அதற்குப்பின் விஷயம் அறிந்த பார்வதி, சாமியார் ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர் வெற்றிலையில் மை போட்டு தொலைந்து போன பொருள்களை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்ல, முத்து கிண்டல் அடித்தார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் சாமியார், வெற்றிலையில் மை தடவி ஓட்டை போட்டு விட்டார். உடனே வீட்டில் உள்ளவர்கள் சிரிக்க, அவர் அங்கிருந்து வேகமாக கிளம்பினார்.மனோஜ்க்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. அதற்குப்பின் முத்து-மீனா இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது முத்து, கதிர் பண விஷயத்தை நானே கண்டுபிடிக்கிறேன் என்று சொன்னார். மறுநாள் காலையில் மனோஜிக்கு பிறந்தநாள் என்பதால் ரோகினி சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அதோடு அவருக்காக புது கார் வாங்கி தந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்குப்பின் மனோஜ் பிறந்த நாளைக்கு கேக் வெட்டி எல்லோருமே கொண்டாடினார்கள். அதற்கு பின்பு பவானியில் கல்யாணத்திற்கு அண்ணாமலையின் குடும்பமே சென்றது. அங்கு மலேசியா மாமா கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடுகளையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்தார். ஆனால், முத்து குடும்பத்தினர் அங்கு வந்திருப்பது அவருக்கு தெரியவே இல்லை. அண்ணாமலை குடும்பத்திலிருந்து ஒவ்வொருவரும் வருகின்ற தருணத்தில் எல்லாம் எப்படியோ மலேசியா மாமா அங்கிருந்து சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பவானியின் கல்யாண வேலைகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அண்ணாமலையின் குடும்பத்தை பார்ப்பதற்காக மலேசியா மாமாவும் ரெடியாக இருக்கிறார். ஆனால், ஏதாவது ஒரு தடங்கல் வருவதால் அண்ணாமலை குடும்பத்தை மலேசியா மாமாவால் பார்க்க முடியாமல் போகிறது. பின் சுருதி தன்னுடைய மாமியாரை போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் ரோகினி சேர்ந்து கொள்கிறார். அப்போது மீனா வந்தவுடன் விஜயா கிளம்பி விடுகிறார். இதனால் மீனா வருத்தப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் மாமியார், மருமகள்கள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை பார்த்தவுடன் முத்துக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பின் முத்து தன்னுடைய அப்பா, சகோதரர்களிடம் அதை சொல்லி அவர்களிடம் காண்பிக்கிறார். எல்லோருமே சந்தோஷப்பட்டு சாப்பாட்டை ஒருவருக்கு ஒருவர் மாத்தி ஊற்றிக் கொள்கிறார்கள். அதை போட்டோவும் எடுக்கிறார்கள். பின் சமையல் செய்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மலேசியா மாமாவே இறங்கி சமையல் செய்கிறார். அந்த இடத்திற்கு முத்து தன்னுடைய அப்பாவிற்கு தண்ணீர் வாங்க வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.