விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் வீட்டில் இருந்தே மீனா ஆர்டரை முடித்து விட்டதால் எல்லோரும் பாராட்டி இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து விஜயா- ரோகினி- மனோஜ் மூவருக்குமே காண்டாகி இருந்தது. அதற்குப்பின் ஷோரூமில் ஜிஎஸ்டி கட்டவில்லை என்று வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருந்தது. இதைப் பற்றி ரோகினி, மனோஜிடம் கேட்க, அவர் பெரிதாக அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் பார்த்து ஜிஎஸ்டி வரி துறை அதிகாரிகள் கடைக்கு வந்து மனோஜிடம் விவாதம் செய்தார்கள்.
கடைசியில் கடைக்கு சீல் வைப்பதாக சொன்னார்கள். உடனே ரோகினி, அவர்களிடம் அனுமதி வாங்கி விட்டார். இன்னொரு பக்கம் முத்து, கிரிஷ், அவருடைய பாட்டியும் பள்ளிக்கு வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் முத்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கிரிஷ் இருக்கும் இடம் முத்துவுக்கு தெரியவில்லை. பின் பள்ளியில் நடந்ததை பற்றி கிரிஸ் பாட்டி தன்னுடைய மகள் ரோகினிக்கு போன் செய்து சொல்ல, அவர் ரொம்பவே பயந்து விட்டார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி தன்னுடைய நகைகளை எல்லாம் அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இன்னொரு பக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள், உங்களுக்கு கொடுத்த டைம் முடிந்து விட்டது. கடைக்கு சீல் வைக்கப் போகிறோம் என்று சொன்னவுடன் மனோஜ் ரொம்பவே பயந்தார். அப்போது ரோகினி பணத்தை கொண்டு வந்து செட்டில் செய்தார். இதனால் மனோஜ் ரொம்ப எமோஷனலாக ரோகினியிடம் பேசி இருந்தார். அதற்குப்பின் முத்து, கிரிசை பார்த்த விஷயத்தை மீனாவிடம் சொன்னார். பின் முத்து டிரைவிங் ஸ்கூல் ஒன்று தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஆரம்பித்து இருந்தார்.
நேற்று எபிசோட்:
அதற்கு தன்னுடைய அப்பா பெயரையே வைத்திருந்தார். புது பிசினஸுக்காக பூஜை எல்லாம் மீனா -முத்து இருவரும் சேர்ந்து போட்டார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ், விஜயாவிற்கு பயங்கரமாக வயிறு எரிந்தது. உடனே மனோஜ், உன்னுடைய பெயரை பிசினஸுக்கு வைக்கவில்லை என்று விஜயாவை ஏத்தி விட்டார். பின் அண்ணாமலை, ஆர்த்தி எடுத்து ஆசீர்வாதம் செய்ய சொன்னார். ஆனால், விஜயா மறுத்தார். அண்ணாமலை அறிவுரை சொன்னதால் விஜயா கோபத்திலேயே பூஜை செய்து இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் டிரைவிங் ஸ்கூலில் மீனா மாணவியாக சேர்கிறார். இதை விஜயா- மனோஜ் இருவருமே கிண்டல் செய்கிறார்கள். ஆனால், அண்ணாமலை திட்டி விடுகிறார். அதற்குப்பின் சீதா ஸ்கூட்டியில் ஹெல்மெட் போடாமல் வந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த அந்த ட்ராபிக் போலீஸ், அவரை வழிமறித்து ஹெல்மெட் போடாததற்கு பைன் கட்ட சொல்கிறார். அதற்கு சீதா, நான் தெரிந்தவள் தானே. இது என்னுடைய தோழியின் ஸ்கூட்டி என்று ஏதோ காரணம் சொல்கிறார். ஆனால், அவர் கோபமாக பைனை கட்டு என்று சொன்னவுடன் சீதாவும் முறைத்துக் கொண்டே பைனை கட்டிவிட்டு அந்த இடத்தில் இருந்து சென்று விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குபின் அண்ணாமலையின் நண்பர் வீட்டிற்கு வருகிறார். அவர் தன்னுடைய மகள் பவானி ஓடிப்போன விஷயத்தை சொல்லி கதறி அழுகிறார். முத்து,மீனா, அண்ணாமலை மூவருமே அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். ஆனால், அவர் தன் மகள் காணவில்லை என்ற வேதனையில் இருக்கிறார். இன்னொரு பக்கம் பவானி காதலன் வீட்டிற்கு மலேசியா மாமா வருகிறார். அவர், பெண்ணை பற்றி விசாரித்து உங்கள் மகனுக்கு கல்யாணம் செய்துவிடலாம். அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுக்கிறார். பிறகு மீனா- முத்து இருவருமே பவானி வேலை செய்த இடத்தில் விசாரிக்கிறார்கள். அப்போது அவர் காதலித்த நபருடன் சென்ற விஷயம் தெரிகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.