விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் ஸ்ருதி, தன்னை கிண்டல் செய்தவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மிளகாய் பொடியை போட்டுக் கொடுத்து விட்டார். அவர்கள் சாப்பிட்ட உடன் ஹோட்டலையும் சுருதியையும் திட்டிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த நீத்து, ரவி இருவருமே என்ன நடந்தது? என்று விசாரிக்காமல் சுருதியை தான் திட்டி இருந்தார்கள். இதனால் சுருதிக்கு பயங்கர கோபம் வந்தது . இன்னொரு பக்கம் வீட்டில் மனோஜ் உடல்நிலை முடியாமல் அவஸ்தைப் பெற்றுக் கொண்டிருந்தார். இதை அறிந்த ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து உதவி செய்தார்.
ரோகினி ரொம்ப எமோஷனலாக மனோஜிடம் பேசி இருந்தார். இருந்தாலுமே, மனோஜ் தன் அம்மா மீது இருந்த பயத்தில் ரோகினி இடம் சரியாக பேசவே இல்லை. இன்னொரு பக்கம் மீனா, முத்து வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அப்போது அண்ணாமலை, முத்துவிற்கு ஃபோன் செய்து பேசு என்று அறிவுரை செய்தார். முத்து சவாரிக்கு போவதால் வர முடியாது என்று சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் சுருதி ரெஸ்டாரண்டில் நடந்ததை நினைத்து ரவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
சிறகடிக்க ஆசை:
அப்போது போன் செய்த நீத்து, ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்டார். இதை கேட்டவுடன் ரவிக்கு எதுவும் பேச முடியவில்லை. பின் சுருதி, ரவி இடையே இருந்த சண்டையும் நார்மல் ஆகிவிட்டது. மறுநாள் காலையில் ரோகினி, மனோஜ்காக கஞ்சி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து விஜயா, எதற்கு என்று கேட்க, மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். பின் மனோஜை பார்த்து விஜயா பேசி இருந்தார். அப்போது மனோஜ், ரோகினி இடம் பேசாததால் தான் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ? என்று சொன்னார். உடனே கோபப்பட்ட விஜயா, மனோஜை திட்டி இருந்தார். இதையெல்லாம் கேட்டு ரோகிணி வருத்தப்பட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் தனக்கு அடிப்பட்டதை பற்றி மீனா வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்கிறார். ஆனால், விஜயா கிண்டல் கேலி தான் செய்கிறார். அப்போது மீனா, ஆர்டர் போனது பற்றி கூட கவலை இல்லை. சீதா கஷ்டப்பட்டு கடன் வாங்கியெல்லாம் பணத்தை எனக்கு ரெடி பண்ணி கொடுத்தார். அந்த பணம் பறிபோனது நினைத்தால் தான் ரொம்ப வருத்தமாக இருக்கிறது என்று புலம்புகிறார்.
உடனே அண்ணாமலை, விஜயாவிடம் இருக்கும் நகையை கேட்கிறார். ஆனால், விஜயா தர முடியாது என்று ரொம்ப கேவலமாக மீனாவை பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
கோபத்தில் மீனா, எனக்கு யாருடைய நகையும் தேவையில்லை. எங்கள் பிரச்சனையை நாங்கள் சமாளித்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார். உடனே ரோகினி-மனோஜ் இது தான் சந்தர்ப்பம் என்று முத்து,மீனாவை அவமானப்படுத்தி பேசுகிறார்கள். அதற்கு மீனாவும் பதிலடி கொடுக்கிறார். அதற்குப்பின் மீனாவின் அம்மா, தங்கை, தம்பி எல்லாம் வருகிறார்கள். அவர்களை பார்த்தவுடன் விஜயா ரொம்ப ஏளனமாக பேசுகிறார். அப்போது முத்து, மீனா ஆர்டர் செய்த மண்டபத்தின் அட்ரசை வாங்கி எடுத்துக்கொண்டு விசாரிக்க செல்கிறார். பின் வீட்டிற்கு பார்வதி வருகிறார். அப்போது அவரிடம் விஜயா, மீனா ஆர்டர் பறிபோனதை பற்றி சொல்லி ரொம்ப சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் மீனாவின்பணத்தை சிந்தாமணியின் ஆட்கள் திருடி விடுகிறார்கள். இதை கண்டுபிடிக்க முத்து தன் நண்பன் செல்வத்துடன் மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு மண்டபத்தின் மேனேஜரிடம் ஆர்டர் எடுத்தவரைப் பற்றி முத்து கேட்கிறார். அதற்கு மண்டபத்தின் மேனேஜர், சிந்தாமணி என்று சொன்னவுடன் முத்துவிற்கு சந்தேகம் அதிகமானது. இது சிந்தாமணி மட்டும் செய்யவில்லை. அவருக்கு யாராவது துணைய இருக்கும் வேண்டும். அப்போ தான் மீனா வந்த நேரம், பணம் ரெடியான விஷயம் எல்லாம் தெரிந்து செய்திருக்க முடியும் என்று முத்து சந்தேகப்படுகிறார்.