புது தொழில் தொடங்கும் முத்து, வயித்தெரிச்சலில் விஜயா செய்தது – விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
128
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இன்னொரு பக்கம் ஸ்ருதி, ரவி ஹோட்டலில் வேலை சேர்ந்தார். மீனா நல்லபடியாக ஆர்டரை செய்து முடித்ததால் மாலை போட்டுவிட்டு வாழ்த்துக்கள் சொன்னார் முத்து. அப்போது முத்து, அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என்றாலுமே மீனா செய்தார். வீட்டில் இருந்தே மீனா ஆர்டர் முடித்தது பெரிய விஷயம் என்று அவரை ரொம்ப பாராட்டி பேசி இருந்தார். வீட்டில் உள்ள மற்றவர்கள் மீனாவிற்கு வாழ்த்து சொன்னார்கள். இதையெல்லாம் பார்த்து விஜயா- ரோகினி- மனோஜ் மூவருக்குமே காண்டாகி இருந்தது.

-விளம்பரம்-

அதற்குப்பின் மீனா, விஜயா செய்த வேலையை பற்றி சொன்னார். இதனால் கோபப்பட்ட முத்து, அம்மா உடம்பு முடியாது போல் நடித்து இருந்தார். மீனா வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. சிந்தாமணி உடன் சேர்ந்து தேவையில்லாத வேலை செய்கிறார் என்றெல்லாம் சொன்னவுடன் அண்ணாமலை, விஜயாவை திட்டி இருந்தார். ஆனால், விஜயா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் முத்து, மீனாவின் பெயரில் அக்கவுண்ட் ஓபன் செய்தார். நேற்று எபிசோட்டில் மீனா தன்னுடைய தொழிலில் முன்னேறி வருவதால் வரி கட்ட வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முத்து செய்தார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இதை பார்த்து விஜயாவிற்கு பயங்கரமாக வயிறு எரிந்தது. பின் மீனா, தன்னுடைய முதல் செக்கை ஸ்ருதி-ரவிக்கு தான் கொடுத்தார். இதையெல்லாம் பார்த்த மனோஜ் கிண்டலடித்துக் கொண்டிருந்தார். அதற்குப்பின் ஷோரூமில் ஜிஎஸ்டி கட்டவில்லை என்று வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் வந்திருந்தது.
இதைப் பற்றி ரோகினி, மனோஜிடம் கேட்க, அவர் பெரிதாக அதை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார். அந்த சமயம் பத்து ஜிஎஸ்டி வரி துறை அதிகாரிகள் கடைக்கு வந்து மனோஜிடம் விவாதம் செய்தார்கள்.

நேற்று எபிசோட்:

அப்போது மனோஜ், கொஞ்சி கேட்டும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் கடைக்கு சீல் வைப்பதாக சொன்னார்கள். உடனே ரோகினி, அவர்களிடம் சில மணி நேரம் அனுமதி வாங்கி விட்டார். இன்னொரு பக்கம் முத்து, தன்னுடைய அப்பாவை பள்ளியில் விட்டார். அந்த சமயம் பார்த்து கிரிஷ், அவருடைய பாட்டியும் பள்ளிக்கு வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் முத்து நலம் விசாரித்து பேசிக் கொண்டிருந்தார். ஆனால், கிரிஷ் இருக்கும் இடம் முத்துவுக்கு தெரியவில்லை. பின் பள்ளியில் நடந்ததை பற்றி கிரிஸ் பாட்டி தன்னுடைய மகள் ரோகினிக்கு போன் செய்து சொல்ல, ரோகினி ரொம்பவே பயந்து விட்டார். இன்றைய எபிசோட்டில் ரோகினி தன்னுடைய நகைகளை எல்லாம் அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள், உங்களுக்கு கொடுத்த டைம் முடிந்து விட்டது. கடைக்கு சீல் வைக்கப் போகிறோம் என்று சொன்னவுடன் மனோஜ் ரொம்பவே பயப்படுகிறார். அப்போது ரோகினி பணத்தை கொண்டு வந்து செட்டில் செய்கிறார். இதனால் மனோஜ் ரொம்ப எமோஷனலாக ரோகினியிடம் பேசுகிறார். அதற்குப்பின் முத்து, கிரிசை பார்த்த விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார். இருவரும் சென்று கிரிஷை பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்டு ரோகினி ரொம்பவே பயப்படுகிறார். பின் முத்து டிரைவிங் ஸ்கூல் ஒன்று தன்னுடைய வீட்டிற்கு வெளியே ஆரம்பிக்கிறார். அதற்கான பூஜை எல்லாம் செய்கிறார்.

சீரியல் ட்ராக்:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முத்து புதிதாக பிசினஸ் தொடங்குகிறார். அதற்கு தன்னுடைய அப்பா பெயரையே வைத்திருக்கிறார். புது பிசினஸுக்காக பூஜை எல்லாம் மீனா -முத்து இருவரும் சேர்ந்து போடுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து மனோஜ், விஜயாவிற்கு பயங்கரமாக வயிறு எரிகிறது. உடனே மனோஜ், உன்னுடைய பெயரை பிசினஸுக்கு வைக்கவில்லை என்று விஜயாவை ஏத்தி விடுகிறார். பின் அண்ணாமலை, ஆர்த்தி எடுத்து ஆசீர்வாதம் செய்ய சொல்கிறார். ஆனால், விஜயா மறுக்கிறார். அண்ணாமலை அறிவுரை சொன்னதால் விஜயா கோபத்திலேயே ஆர்த்தி எடுக்கிறார்.

Advertisement