திருடி என்று மீனாவை அசிங்கப்படுத்திய ஸ்ருதி அப்பா, வெளுத்து வாங்கிய முத்து- பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை

0
202
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார்.

-விளம்பரம்-

ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் ஏற்பாடு நடக்கிறது. இதில் ரோகிணி தன் தந்தையை வர வைக்க வேண்டும் என்று விஜயா அடம் பிடிக்கிறார். இதனால் தன்னை பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ரோகிணி இருக்கிறார். இன்னொரு பக்கம் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள். பின் ஸ்ருதி -ரோகினிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷனிற்கு எல்லோருமே மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள்.

தாலி பிரித்து கோர்க்கும் பங்சன்:

மேலும், வீழாவில் முத்து சண்டைக்கு போகக்கூடாது என்று மீனா பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
இதனால் ரோகினி எப்படியாவது முத்துவை குடிக்க வைத்து பங்ஷனை நிறுத்த திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா அடியாட்களை ரெடி பண்ணி முத்து விடம் சண்டை வாங்க ஏற்பாடு செய்கிறார். மீனா, முத்துவை பிரச்சனையில் காப்பாற்ற போராடுகிறார். பின் ஒரு வழியாக பங்க்ஷன் நன்றாக நடைபெற்றது.

-விளம்பரம்-

கடந்த வாரம் நடந்தது:

ரோகிணி- ஸ்ருதி அம்மா விரித்த வலையில் முத்து விழவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் முடிந்தது. ஆனால், ரோகினியின் அப்பா வரவில்லை என்று விஜயா பயங்கரமாக ரோகினியை திட்டி விடுகிறார். ரோகிணியும் என்ன செய்வதென்றும், தன்னை பற்றிய உண்மை வெளியே வந்து விடுமா? என்ற பயத்தில் அழுந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில், மீனா ரூமிற்கு செல்கிறார். அங்கு ஸ்ருதி மாலையை கீழே போட்டு இருக்கிறார். இதனால் மீனா மாலையை எடுத்து பார்க்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

அப்போது மாலையில் தங்க செயின் இருப்பதை பார்த்து மீனா எடுக்கிறார். உடனே ரூமிற்கு வந்த சுருதி அப்பா, திருடி என்ன வேலை செய்கிறார்? இதுதான் உன் வேலையா? என்று மீனாவை மோசமாக பேசுகிறார். பின் அனைவர் முன்னாடியும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார். இதை பார்த்து தாங்கிக் கொள்ளாத முத்து, ஸ்ருதி அப்பாவை அடிக்கிறார். அந்த சமயம் பார்த்து ஸ்ருதி- ரவி இருவரும் உள்ளே வருகிறார்கள். இதனால் ஃபங்ஷனில் கலவரம் வெடிக்கிறது. இனி வரும் நாட்களில் ஸ்ருதி அம்மாவின் திட்டம் நடந்ததா? ஸ்ருதி என்ன போகிறார்? இந்த கலவரத்தால் ரோகினி தப்பித்தாரா? போன்ற பல சுவாரசியங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement