விபத்தில் மனோஜிக்கு ஏற்பட்ட விபரீதம், ரோகினியின் நிலை என்ன? விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

0
197
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சிந்தாமணியின் ஒவ்வொரு வார்த்தைக்குமே மீனா பதில் கொடுத்தார். இதெல்லாம் பார்த்து விஜயாவிற்கு பயங்கர கோபம் வந்து மீனாவை திட்டி இருந்தார். பின் மீனா எல்லோருக்கும் சமைத்து வைத்து இருந்தார். மனோஜ், விஜயாவிற்கு மட்டும் தனியாக டயட் புட்டை சமைத்து வைத்திருந்தார். அந்த சமயம் பார்த்து ரவி-சுருதி இருவரும் பீட்சா வாங்கி வந்தார்கள். அதை பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனோஜ், விஜயாவிற்கு இருந்தது. இருந்தாலும் இருவரும் டயட் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சாப்பிடவில்லை.

-விளம்பரம்-

அதற்குப்பின் இரவு வயிறு வலி தாங்க முடியாமல் மனோஜ், விஜயா இருவருமே மாற்றி மாற்றி பாத்ரூம் போனார்கள். வயிறு வலி தாங்க முடியாமல் இரண்டு பேருமே ரொம்ப சோர்வாகி விட்டார்கள். நேற்று எபிசோட்டில் வயிறு வலி தாங்க முடியாமல் மனோஜ்- விஜயா இருவரும் கத்தி புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோரும் வந்து விட்டார்கள். திடீரென்று டயட் ஃபுட் எடுத்துக் கொண்டதால் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கிறது என்று சுருதி சொன்னார். ஆனால், விஜயா இதற்கு எல்லாம் காரணம் மீனா தான்.

- Advertisement -

இன்றைய எபிசோட்:

அவள் தான் பொறாமையில் எங்களுக்கு சமைத்துக் கொடுத்தால் என்று வழக்கம்போல் அவளை திட்டி இருந்தார். உடனே அண்ணாமலை, விஜயாவை திட்டி அறிவுரை சொன்னார். பின் விஜயா- மனோஜ் இருவருமே இனிமேல் டயட் ஃபாலோ பண்ண வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். அதற்கு பின் மீனா, இருவருக்கும் கஷாயம் வைத்து கொடுத்தார். மறுநாள் காலையில் சீதா கோயிலில் தன் அம்மாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து அருண் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்தார்.

நேற்று எபிசோட்:

அப்போது சீதாவிடம் அருண் தன்னுடைய காதலை வெளிப்படுத்த, சீதா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார். அருண், பொறுமையாக யோசித்து முடிவு சொல்லுங்கள் என்று அங்கிருந்து கிளம்பி விட்டார். இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமில் மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பொருட்களை எல்லாம் வாங்க வந்தார். இதை பார்த்தவுடன் ரோகினி பயந்து கொண்டு திட்டி இருந்தார். அந்த சமயம் பார்த்து முத்து, அண்ணாமலை கடைக்கு வந்தார்கள். மலேசியா மாமா ஹெல்மெட் போட்டு கொண்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலேசியா மாமா தலையில் ஹெல்மெட் போட்டதால் எப்படியோ முத்துவிடம் இருந்து தப்பித்து விடுகிறார். அதற்குப்பின் அண்ணாமலை தெரிந்தவருக்கு பொருட்கள் வாங்க வந்த விஷயத்தை சொல்கிறார். இன்னொரு பக்கம் மனோஜ் போனில் பேசிக் கொண்டு வரும்போது தன்னை ஏமாற்றிய கதிரை பார்த்து விடுகிறார். அவரை துரத்தும் மனோஜ், வரும் வழியில் இருக்கும் ஆட்கள் எல்லாம் தள்ளி, அடித்து விட்டு வருகிறார். இதனால் அவர்களும் துரத்திக் கொண்டே வருகிறார்கள். ஒரு கட்டத்தில்
மனோஜ் அந்த ஆட்களுக்கு பயந்து ஓடி வரும் போது எதிர்பாராத விதமாக வண்டியின் மீது மோதி விடுகிறார். அதில் அவருடைய கண்களில் கண்ணாடி துண்டுகள் இறங்கி விடுகிறது.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் விஜயா தவறி கீழே விழுகிறார். உதவி செய்ய வந்த முத்துவையும் திட்டி அனுப்பி விடுகிறார். இதனால் அவருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அந்த சமயம் பார்த்து ரோகினி, மனோஜ்க்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை சொன்னவுடன் விஜயா பயங்கரமாக கதறி அழுகிறார். பின் குடும்பமே பதறி அடித்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அப்போது டாக்டர், ஆபரேஷன் முடிந்தது. கண் கட்டை திறந்த பிறகு தான் என்ன என்று சொல்ல முடியும் என்றால் ரோகிணி விஜயா விடாமல் திறந்து அழுது கொண்டிருக்கிறார்கள். அந்த சமயம் பார்த்து மனோஜை துரத்தி வந்த நபர்கள் முத்துவிடம் பணத்தை கேட்கிறார்கள். பின் நடந்ததை விசாரித்த முத்து, எல்லோருக்கும் பணத்தை கொடுத்து அனுப்புகிறார். யாரை துரத்துவதற்காக மனோஜ் ஓடி வந்தான் என்று முத்து-மீனா இருவருமே யோசிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement