நாயகிக்கு கூட கிடைக்காத வாய்ப்பு – சிறகடிக்க ஆசை வில்லிக்கு அடித்த ஜாக்பாட்

0
266
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகைக்கு அடித்த ஜாக்பாட் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. தற்போது சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு மீண்டும் வருகிறார்.

-விளம்பரம்-

பின் மனோஜிடம் ஜீவா வசமாக மாட்டிக் கொள்கிறார். அவர் மீது போலீசிலும் புகார் அளிக்கிறார். போலீசில் ஜீவா பணம் கொடுக்க முடியாது என்று மறுக்கிறார். மனோஜ் – ரோகினி இருவருமே பணத்தை கொடுக்கவில்லை என்றால் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்று கூறுகிறார்கள். இதனால் வேறு வழி இல்லாமல் ஜீவாவும் பணத்தை கொடுத்து விடுகிறார். ஜீவாவிடம் இருந்து பணத்தை மனோஜ்- ரோகினி வாங்கி விடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை வீட்டில் மறைக்கிறார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே நம்புகிறார்கள். ஆனால், முத்து மட்டும் சந்தேகப்படுகிறார். இனி வரும் நாட்களில் மனோஜருக்கு பணம் கிடைத்த விஷயம் வீட்டிற்கு தெரிய வருமா? முத்து கண்டுபிடிப்பாரா? ரோகிணியின் உண்மை முகம் வெளிவருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் சல்மா அருணாகம்.

சீரியல் நடிகை சல்மா:

இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவருக்கு சிறு வயதில் இருந்தே மீடியாவில் சாதிக்க வேண்டும் என்று அதிக ஆர்வம். இதனால் இவர் மாடலிங்கில் நுழைந்தார். இதுவரை இவர் பத்துக்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, பூர்விகா விளம்பரத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பின் இவர் நம்ம வீட்டுப் பொண்ணு, ராஜா ராணி சீசன் 2, பாரதிகண்ணம்மா, அமுதாவும் அன்னலட்சுமி போன்ற பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரைப் பற்றி பெரிதாக மக்களுக்கு தெரியவில்லை. இவரை மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது சிறகடிக்க ஆசை சீரியல் தான். பின் சமீபத்தில் அளித்த பேட்டியில் சல்மா, நான் திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகுதான் மீடியாவிற்குள் நுழைந்தேன். அதற்கு பிறகு என்னால் முடியும் என்று நினைத்து தான் மாடலிங் நுழைந்தேன். அதற்கு பிறகு தான் எனக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சல்மாவுக்கு கிடைத்த வாய்ப்பு:

அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியா முழுவதும் திட்டி தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால கமெண்ட் பிளாக் செய்து வைத்திருப்பதாக சல்மா கூறியிருந்தார். இந்த நிலையில் சல்மாவுக்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பு சல்மாவிற்கு கிடைத்திருக்கிறது. அந்த சீரியலில் அவருடைய கதாபாத்திரம் நெகட்டிவ் இல்லை என்று கூறியிருக்கிறார். மற்றபடி தான் நடிகருக்கும் சீரியல் குறித்து எந்த விபரத்தையும் கூறவில்லை. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலருமே சல்மாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement