இப்படி மூடி மறைச்சுட்டுருக்கதுக்கு உண்மைய சொல்லியேருக்கலாம் முத்து சிறகடிக்க ஆசை சீரியலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.

0
600
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. சீரியலில் கதாநாயகன் முத்து. வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட் செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. ஆனால், தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார்.

-விளம்பரம்-

ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. வழக்கம் போல் பணக்கார மாமியார் அராஜகம் நடக்கிறது. மேலும், முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் ரவி- ஸ்ருதி இருவரையும் மீனா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். முதலில் ரூம் பிரச்சினை வருகிறது. எப்படியோ அந்த பஞ்சாயத்து தீர்ந்து விடுகிறது. பின் வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. ஒருவழியாக மனோஜ் ஒரு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் வேலைக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தம்பி கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் போய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார். இது முத்துவிற்கு தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் அம்மாவிடம் பணத்தை திருடியது மீனாவின் தம்பி என்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால், இதை வீட்டில் சொன்னால் மீனாவிற்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லாமல் மீனா தம்பியிடம் முத்து பேசுகிறார். ஆனால், அவன் திமிராக முத்துவிடம் பேசி அனுப்புகிறார்.

சீரியல் கதை:

பின் சிட்டி முத்துவின் நண்பர் வட்டி கட்டவில்லை என்று அவரை அடிக்கிறார். இதை பார்த்த முத்து சிட்டியை புரட்டி போட்டு எடுக்கிறார். அங்கு இருந்த மீனாவின் தம்பி எதிர்த்து கேட்டதற்கு முத்து அவனின் கையை முறித்து விடுகிறார். இதனால் மீனா- முத்துக்கிடையே விரிசல் ஏற்படுகிறது. நேற்று எபிசோட்டில், சிட்டி தன்னிடம் வட்டிக்கு வாங்கி இருக்கும் முத்துவின் நண்பர்களிடம் மொத்த பணத்தையும் திருப்பி தர கேட்டிருக்கிறார். திருப்பி தரவில்லை என்றால் மொத்த பேருடைய காரை தூக்கி விடுவேன் என்று மிரட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஆட்டோக்காரன் அவதாரத்தில் முத்து:

இதனால் முத்து தன்னுடைய காரை விற்று நண்பர்களுடைய மொத்த பணத்தையும் சிட்டிக்கு செட்டில்மென்ட் செய்திருக்கிறார். ஆனால், முத்து கார் விற்ற விஷயம் வீட்டிற்கு தெரியாது.நேற்றைய எபிசோட்டில் முத்து காரை விற்று என்ன செய்யப் போகிறான்? என்று நண்பர்கள் குழப்பத்தில் இருக்கும்போது ஆட்டோவில் வந்து முத்து இறங்கினார். இன்னொரு பக்கம் வீட்டில் மீனாவின் அம்மா தன்னுடைய கணவனின் நினைவு நாளுக்கு அனைவரையும் அழைக்க வந்திருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

வழக்கம் போல் விஜயா கிண்டல் கேலி செய்து கேவலப்படுத்துகிறார். அதே சமயம் ஹோட்டலில் மனோஜ் செய்த சில தவறால் வேலை பறி போகிறது. இதை அறிந்த ரோகிணி பயங்கரமாக மனோஜ் இடம் கோபப்படுகிறார்.இப்படி இருக்கும் இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் அப்பா அறிவுரை சொல்லி மீனாவின் வீட்டிற்கு முத்துவை அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் வீட்டில் நினைவுக்கு நாளுக்கு வந்த அனைவருமே முத்து செய்த காரியத்தை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

த்து உண்மையை சொல்வாரா?

இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் மீனாவின் அம்மா முத்துவை குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பாத்து முத்து வந்த உடன் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். இனிவரும் நாட்களில் முத்து உண்மையை சொல்வாரா? மீனா தம்பியின் சுய ரூபம் தெரிய வருமா? மனோஜூக்கு வேலை போன விஷயம் எல்லோருக்கும் தெரிய வருமா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement