ஸ்ருதியை சமாதானம் செய்யும் மீனா, உண்ணாவிரதம் இருக்கும் விஜயா.ஸ்ருதி என்ன செய்ய போகிறார்? சிறகடிக்க ஆசை அப்டேட்

0
229
Siragadikka
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். முத்துவை கண்டால் அவருக்கு பிடிக்காது. காரணம், முத்து தன் தந்தைக்கு ஆதரவாக நிற்பதாலும், உண்மையாக இருப்பதாலும் அவருக்கு பிடிக்கவில்லை.

-விளம்பரம்-

உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷன் நடக்கிறது. இதில் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள். விழாவில் முத்து சண்டைக்கு போகக்கூடாது என்று மீனா பார்த்துக் கொண்டே இருக்கிறார். கடைசியில் ஒரு வழியாக ரோகிணி- ஸ்ருதி அம்மா விரித்த வலையில் முத்து விழவில்லை. எந்த பிரச்சனையும் இல்லாமல் பங்க்ஷன் முடிந்தது. ஆனால், மீனா, ஸ்ருதியின் தங்க செயினை திருடி விட்டார் என்று பழி போடுகிறார் சுருதி அப்பா.

முத்து – ஸ்ருதியின் அப்பாவுக்கு நடந்த சண்டை:

பின் அனைவர் முன்னாடியும் மீனாவை அசிங்கப்படுத்துகிறார். ஆனால் மீனா, நான் அதை செய்ய திருடவில்லை, சுருதியிடம் கொடுக்கப் போனேன் என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறார். ஸ்ருதியின் அப்பா- அம்மா இருவருமே அதை ஏற்றுக் கொள்ளாமல் மீனாவையும் முத்து குடும்பத்தையும் மோசமாக பேசுகிறார்கள். இதனால் முத்து – ஸ்ருதியின் அப்பாவிற்கு அடிதடி அளவிற்கு சண்டை செல்கிறது. பின் ஸ்ருதி வீட்டிற்கு வரமாட்டேன் என்று அம்மா வீட்டிற்கு செல்கிறார். இதை எல்லாம் பார்த்த விஜயா, வீட்டிற்கு வந்த முத்து- மீனாவை பார்த்து வெளியே போங்க! நீங்கள் இல்லை என்றால் தான் சுருதி- ரவி வீட்டிற்கு வருவார்கள் என்று சொல்கிறார். ஒரு வழியாக அந்த பஞ்சாயத்து முடிந்தது.

-விளம்பரம்-

வீட்டிற்கு வர மறுக்கும் ஸ்ருதி:

இன்னொரு பக்கம் ஸ்ருதி- ரவியை வர வைக்க வீட்டில் உள்ள எல்லோருமே போன் செய்து பேசுகிறார்கள். ஆனால், வர முடியாது என்று சுருதி மறுத்து விடுகிறார். இன்றைய எபிசோட்டில் மீனா, சுருதியை சந்தித்து பேசுகிறார். ஸ்ருதி, மீனாவிடம் கோபம் காட்டுகிறார். இருந்தாலும் மீனா கோபப்படாமல் ஃபங்ஷனில் நடந்த எல்லா உண்மையும் சொல்கிறார். உங்க அப்பா தான் என்னை ரொம்ப மோசமாக பேசினார். பிச்சை எடு என்றெல்லாம் சொன்னார் என்று மோஷனலாக மீனா பேசியிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

இதைக் கேட்டு ஸ்ருதி அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் ரவி, ஸ்ருதியிடம் சண்டை போட்டு வீட்டுக்கு செல்லாமல் ஹோட்டலில் தங்கி இருப்பது முத்துவுக்கு தெரிகிறது. இதனால் ரவியை முத்து வீட்டிற்கு கூப்பிடுகிறார். ஆனால், ஸ்ருதி வந்தால் தான் வருவேன் என்று ரவி மறுக்கிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதி- ரவி வராததை நினைத்து விஜயா வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். பின் ஸ்ருதி- ரவி வந்தால் தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடுகிறார். இப்படி இன்றைய எபிசோடு நன்றாக கலகலப்பாக சென்றது. இனி வரும் நாட்களில் சுருதி மனம் மாறி வருவாரா? விஜயா எடுக்க போகும் முடிவு என்ன? போன்ற பரபரப்புடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement