விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களா வீட்டினுடைய போலி ஓனர்கள், மனோஜிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். ஆனால், முத்துவிற்கு சந்தேகம் வந்தது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பின் வீட்டிற்கு வந்த நியூமராலஜிஸ்ட் ‘ரோமயா’ என்று பெயர் வைத்தார். அதற்கு பின் பெண் மந்திரவாதி வந்தவுடன் எல்லோருமே பயத்தில் இருந்தார்கள். அவர் எல்லா லைட்டை போட சொல்லி கண்ணை மூடி, கையை தூக்கி நின்றார்.
பின் வீட்டில் உள்ள எல்லா லைட்டுகளுமே ஆட, ஜன்னல் கதவெல்லாம் சத்தம் கேட்டது. இதனால் எல்லோருமே பேய் தான் இருக்கிறது என்று பயந்து விட்டார்கள். உடனே எல்லா லைட்டும் அணைந்து விட்டது. உடனே முத்து, நான் தான் மெயின் ஆஃப் பண்ணேன் என்று சொன்னார். இருந்தாலுமே அந்த மந்திரவாதி எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். ஸ்ருதி – முத்து இருவருமே மாத்தி மாத்தி கமெண்ட் போட்டுக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் அவர், இங்கு பேயில்லை என்று சொல்லி பணம் வாங்கி விட்டார். நேற்று எபிசோட்டில் மனோஜ், புது பங்களா மீது லோன் போட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை லோன் வாங்குகிறார்.
சிறகடிக்க ஆசை:
பேங்க் மூலம் வந்தவர்கள் வீட்டை சுற்றி பார்த்தார்கள். மீதி 70 லட்சம் பணம் தேவை என்பதால் தன்னுடைய அப்பாவிடம் மனோஜ் கேட்டார். அப்போது அவர், வீட்டை விற்று எனக்கான சேர் கொடுங்கள். நான் இந்த வீட்டை வாங்கணும் என்றவுடன் எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். பின் முத்து- ரவி எல்லோருமே கோபப்பட்டார்கள். உடனே அண்ணாமலை, இது என்னுடைய வீடு இல்லை. விஜயா தான் முடிவெடுக்க வேண்டும். அது அவருடைய அப்பா தந்தது என்று சொன்னவுடன் மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார்.
நேற்று எபிசோட்:
இதனால் முத்து, மனோஜ் இடையே சண்டை நடந்தது. அதற்குப்பின் முத்து, ரோகினி உடைய அப்பாவிடம் வாங்கி இந்த வீட்டை வாங்கு என்று சொன்னவுடன் எல்லோருமே ரோகினி பக்கம் திரும்பி இருந்தார்கள். ரோகினி, தன் மாமாவிடம் பேசுவது போல் வித்யாவிற்கு ஃபோன் செய்து பணம் கேட்டு நடித்தார். ஆனால், கடைசியில் பணம் இல்லை என்று சொன்னார். இது எல்லாம் கவனித்த மீனாவிற்கு சந்தேகம் வந்து முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் ரவி, மனோஜ் செய்த வேலையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரோகினி- மனோஜ் இருவருமே ரவியிடம் பணம் கேட்கிறார்கள். அதற்கு ரவி, என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்கிறார். ரோகினி, ஸ்ருதி அப்பாவிடம் கேட்டு வாங்கி தாருங்கள். நாங்கள் கடனாக கேட்கிறோம் என்று சொல்கிறார். ஸ்ருதி, நான் எங்களுக்காகவே அப்பாவிடம் கேட்க மாட்டோம். அவரிடம் பணம் கேட்பதெல்லாம் பிடிக்காது என்று சொல்கிறார். ரவி, நான் என்னுடைய ஹோட்டலுக்காக கூட அவரிடம் பணம் கேட்க மாட்டேன். என்னை அடமானம் வைத்து பணம் கேட்க மாட்டேன் என்று சொன்னார்.
சீரியல் ட்ராக்:
ரோகினி- மனோஜ் விடாமல் அவர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுருதி- ரவி இருவருமே முடியாது என்று மறுத்து விடுவதால் கோபப்படுகிறார்கள். பின் எப்படியாவது இந்த வீட்டை வாங்க வேண்டும். இவர்கள் முன்பு தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று ரோகினி, மனோஜை உஷ்பேத்துகிறார். மனோஜ், நான் புது டீலரிடம் பணம் கேட்கிறேன் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவருமே வீடு வாங்குவது பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் தூங்கிக் கொண்டிருக்கும் போது ரோகினியை விஜயா அடித்து வீட்டை விட்டு துரத்துவது போல கனவு காண்கிறார். கனவில் கத்தும் ரோகினியை மனோஜ் எழுப்ப, அவர் பதறி போகிறார். பின் அது கனவு தான் என்று பெரு மூச்சு விடுகிறார் ரோகினி. மறுநாள் காலையில் சவாரிக்கு
முத்து மனோஜினுடைய முன்னாள் காதலி ஜீவாவை அழைத்துக் கொண்டு போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.