முத்து-மீனாவிற்கு வரும் புது பிரச்சனை, சமாளித்து வெளியே வருவார்களா? பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்

0
184
- Advertisement -

முத்து- மீனாவிற்கு காத்திருக்கும் புது பிரச்சனை குறித்த ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போது டார்பில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார். காரணம், முத்து படிக்கவில்லை, அவன் ஓவராக பேசுகிறான், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது.

-விளம்பரம்-

உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. மனோஜ் வேலை இல்லாமல் சுற்றி கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மீனாவின் தம்பி சத்யா கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் பொய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

சீரியல் கதை:

இது முத்துவிற்கு தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் அம்மாவிடம் பணத்தை திருடியது மீனாவின் தம்பி என்பதை முத்து தெரிந்து கொள்கிறார். இதை வீட்டில் சொன்னால் மீனாவிற்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லாமல் மீனா தம்பியிடம் முத்து பேசுகிறார். ஆனால், அவன் திமிராக முத்துவிடம் பேசுகிறான். இதனால் சிட்டி- முத்து இடையே ப்ரச்சனை ஏற்படுகிறது. நண்பர்களுக்காக முத்து தன் காரை விற்று ஆட்டோ ஓட்டுகிறார். இந்த உண்மை வீட்டுக்கு தெரிகிறது. ஆனால், முத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

மீனாவுக்கு கிடைத்த ஆர்டர்:

இந்த உண்மையை மீனா அறிந்து கொள்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் எபிசோடில் மீனா- முத்து இடையே சத்யாவால் மீண்டும் சண்டை வருகிறது. பிறகு முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. இதை முத்து மீனாவிடம் சொல்கிறார். பின் வீட்டில் எல்லோருமே மாலையை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சீக்கிரம் மாலை செய்ய மீனா இன்னும் சில நபர்களை வேலைக்கு அழைத்து வந்திருக்கிறார். வழக்கம்போல் விஜயா, ரோகினி, மனோஜ்க்கு இது பிடிக்கவில்லை. மூவரும் சேர்ந்து கொண்டு மற்றவர்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் வெற்றிகரமாக மீனா 500 மாலை ஆர்டரை செய்து கொடுக்கிறார். அதை முத்து தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் வண்டியில் ஏற்றி ஆரம்பிக்கிறார். முத்து கால் செய்து ஆர்டர் சரியாக சென்று விட்டதா? என்று கேட்கும்போது வண்டியும் மாலையும் என்னிடம் இல்லை, யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என்று சொல்கிறார். ஏற்கனவே சிட்டி- முத்துவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்கு ஏற்ப மாலை வண்டி காணாமல் போகிறது. இதனால் முத்து என்ன செய்யப் போகிறார்? முத்து சரியான நேரத்தில் மாலையை கொண்டு போய் சேர்ப்பாரா? முத்து பிரச்சனையில் இருந்து தப்பிப்பாரா? போன்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement