பரிகாரம் செய்ய விஜயா- மனோஜ் செய்த அட்ராசிட்டி, முத்து செய்த வேலை- கலகலப்பில் சிறகடிக்க ஆசை

0
197
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடையில் மந்திரித்த முட்டை வைத்து இருந்ததால் மனோஜ் ரொம்பவே பயந்து விட்டார். உடனே அவர் சாமியாரை பார்த்து நடந்ததை சொல்ல, அவர் இன்னும் பயமுறுத்தி பரிகாரம் செய்ய சொன்னார். பின் இதை பற்றி விஜயாவிடம் சொல்ல, அவர் முதலில் மறுத்தாலும் மனோஜ் கட்டாயத்தால் ஒத்து கொண்டார். பின் வீட்டில் மனோஜ் செய்த முட்டாள் வேலையால் எல்லோருக்கும் ஷாக் அடித்தது. அப்போது மீனா, பூரிக்கட்டையை வைத்து அடிக்க எல்லோருமே கீழே விழுந்தார்கள். ஒருவழியாக யாருக்கும் ஒன்னும் ஆகவில்லை.

-விளம்பரம்-

பின் மண்டபத்தில் டெக்ரேசன் செய்யும் புதிய ஆர்டர் கிடைத்தவுடன் வீட்டில் எல்லோரிடமும் மீனா சொல்லி சந்தோஷப்பட்டார். இந்த சந்தோஷத்தில் எல்லோருக்குமே பிரியாணி சமைப்பதற்காக தன்னுடைய தோழியிடம் கறி வாங்க சென்று இருந்தார் மீனா. அங்கு மலேசியா மாமா தான் கறி வெட்டி இருந்தார். மீனாவை பார்த்தவுடன் அவர் முகத்தில் துணியை போட்டு மறைத்துக் கொண்டார். நேற்று எபிசோட்டில் மீனாவிற்கு அவர் யார் என்பது தெரியவில்லை. இன்னொரு பக்கம் வீட்டில் விரதம் என்பதால் மனோஜ் – விஜயா எதுவும் சாப்பிடாமல் அமைதியாக இருந்தார்கள்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை:

இதனால் வெளியே வைத்து தான் சசமைத்து இருந்தார்கள். சாப்பாடு வாசனையை மனோஜால் தாங்க முடியவில்லை. இருவரும் புலம்பி கொண்டு இருந்தார்கள். ஒரு வழியாக பிரியாணியை சூப்பராக சமைத்து சாப்பிட்டு இருந்தார்கள். இன்னொரு பக்கம் ரோகினி தன்னுடைய தோழி வீட்டிற்கு போனார். அப்போது வந்த மலேசியா மாமா, மீனா என்னுடைய கடைக்கு தான் கறி வாங்க வந்திருந்தார் என்று சொன்னவுடன் ரோகினி அதிர்ச்சி ஆனார். அதற்கு அவர், மீனா என்னை பார்க்க வில்லை. ஒவ்வொரு நாளும் நான் தப்பிக்க முடியாது.

நேற்று எபிசோட்:

ஒருவேளை நான் மாட்டிக்கொண்டால் உங்கள் பெயரையும் சொல்லிவிடுவேன். உண்மையை நீங்களே சொல்லிவிடுங்கள் என்று எச்சரித்து விட்டு போனார். இதனால் ரோகினி ரொம்பவே பயந்து விட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் விஜயா- மனோஜ் இருவரும் பரிகாரம் செய்ய போனார்கள். அப்போது மனோஜ் வேப்பிலை ஆடையை அணிந்து கொண்டு காமெடி செய்து கொண்டிருக்கிறார் .இன்னொரு பக்கம் விஜயா மாலையெல்லாம் போட்டு அம்மனுக்கு தீ சட்டி எடுக்கிறார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

மனோஜ் சூடு தாங்க முடியாமல் வேகமாக கோயிலை சுத்துகிறார். ஒருவழியாக இருவருமே தீ சட்டி எடுத்து கோயிலை சுத்துகிறார்கள். அந்த சமயம் கோயிலுக்கு வந்த முத்து-மீனா இதை பார்த்து மொபைலில் வீடியோவாக எடுத்து விடுகிறார்கள். பின் இதை தன்னுடைய அப்பாவிடம் சொல்லி முத்து போட்டு காமிக்கிறார்கள். அப்போது எல்லோரும் வந்ததால் முத்து, குறும்படமாக வீடியோவை போட்டு காண்பிக்கிறார். இதனால் மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரிக்கிறது.

சீரியல் ட்ராக்:

அண்ணாமலை, ஏதாவது விளையாட்டுத்தனமாக செய்ததை கூட இப்படியா நம்புவது என்கிறார். ஆனால், மனோஜ் கேட்கவில்லை. என் வளர்ச்சியின் பொறாமையால் செய்தது என்றெல்லாம் சமாளிதார். அந்த சமயம் பார்த்து ஷோரூமில் வேலை செய்யும் நபர், கடை சாவியை கேட்டு வருகிறார். அப்போது அவர், கடையில் முட்டை வைத்தது யார் என்று தெரிந்தது. பக்கத்து கடைக்காரர் தான் முட்டை வாங்கிக் கொண்டு வந்தார். மழையில் ஒதுங்கியதால் நம் கடையில் வைத்து விட்டு சென்று விட்டார் என்று சொன்னவுடன் மொத்த குடும்பமே மனோஜை பார்த்து முறைக்கிறது. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement