விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கோவிலில் விஜயா- மனோஜ் இருவரும் பரிகாரம் செய்தார்கள். இதை பார்த்த முத்து-மீனா மொபைலில் வீடியோவாக எடுத்து தன்னுடைய அப்பாவிடம் காண்பித்தார்கள். இதனால் மொத்த குடும்பமே விழுந்து விழுந்து சிரித்தது. கடைசியில் அந்த முட்டை பக்கத்து கடைக்காரர் மறதியில் வைத்தது என்று தெரிந்ததும் விஜயா- ரோகினி இருவரும் மனோஜ் மீது பயங்கரமாக கோபப்பட்டார்கள். இன்னொரு பக்கம் மீனா, பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அவரை காதலிக்கும் நபர் ஃபாலோ செய்து வந்தார்.
உடனே மீனா, முத்துவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, அவர் தைரியம் சொன்னார். இன்னொரு பக்கம் ஸ்ருதி, தனக்கு நெருக்கமானவரின் பிறந்த நாள் பார்ட்டிக்கு செல்ல ரவியை அழைத்தார். ஆனால், அவர் வேலை இருந்ததால் மறுத்து விட்டார். இதனால் பார்ட்டிக்கு சுருதி தனியாகவே போனார். ஆனால், அந்த பார்ட்டிக்கு ரவி தன் பாஸுடன் ஆர்டர் எடுத்துக்கொண்டு வந்தார். இதை பார்த்தவுடன் ஸ்ருதிக்கு கோபம் வந்து சண்டை போட்டார். இன்னொரு பக்கம் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க போனார். அப்போது பார்வதி, ரோகினி தான் 2 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தந்தார் என்று சொன்னதும் மீனா ஷாக் ஆனார்.
சிறகடிக்க ஆசை:
நேற்று எபிசோட்டில் ரோகினி, பார்வதியிடம் பணம் கொடுத்த விஷயத்தை முத்துவிடம் மீனா சொன்னார். இதை கேட்டு ஷாக் ஆன முத்து, ரோகினி எதையோ மறைக்க பார்க்கிறார் என்று சந்தேகப்பட்டார். மறுநாள் ரோகினி இடம் மீனா, நீங்கள் பணம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. எதற்காக நீங்கள் கொடுத்தீர்கள்? என்று கேட்டார். உடனே ஷாக்கில் ரோகினி ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே சுருதி, நீங்கள் எதற்கு பணம் கொடுக்கணும்? என்றதற்கு ரோகினியால் எந்த பதிலுமே சொல்ல முடியவில்லை. இதனால் மீனா-சுருதி இருவருக்குமே சந்தேகம் வந்தது.
நேற்று எபிசோட்:
இதைப்பற்றி மீனா, முத்துவிடம் சொல்ல, அவர் ரோகினி பின்னால் மறைந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கலாம் என்றார். பின் மனோஜ் கடையில் திருஷ்டி பொம்மை என்று விஜயாவின் போட்டோவை விற்றார்கள். இதை அறிந்த ரோகினி, மனோஜிடம் சொன்னார். உடனே அந்த நபர், இந்த போட்டோவால் நிறைய பேருக்கு லாபம், நன்மை நடந்து இருக்கிறது என்று சொல், அதை நம்பி மனோஜ் அந்த புகைப்படத்தை வாங்கி இருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் அந்த திருஷ்டி புகைப்படத்தை வீட்டிற்கு மனோஜ் கொண்டு வருகிறார்.
இன்றைய எபிசோட்:
அதை பார்த்து விஜயா பயங்கரமாக கோபப்பட்டு கத்துகிறார். ஆனால், மற்றவர்கள் எல்லோரும் விஜயாவின் புகைப்படத்தை பார்த்து சிரிக்கிறார்கள். கோபத்தில் விஜயா, இதெல்லாம் மீனா செய்த வேலை தான் என்று வழக்கம் போல அவரே திட்டிக் கொண்டிருக்கிறார். அண்ணாமலை-முத்து மீனாவிற்காக சப்போர்ட் செய்துமே அவர் கேட்கவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று மனோஜ் தன்னுடைய அம்மாவை ஏத்தி விட்டார். உடனே சுருதி, நான் தான் இந்த போட்டோவை சோசியல் மீடியாவில் போட்டேன். அதை யாரோ இப்படி செய்திருக்கிறார்கள் என்று சொல்லியுமே விஜயா, மீனாவை தான் திட்டிக் கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதன் பின் மீனாவை காதலிக்கும் நபர், முத்துவிடம் ஐடியா கேட்கிறார். உடனே அவர், மீனாவின் வீட்டிற்கு நேரடியாக சென்று பெண் கேட்க சொல்கிறார். ஷோரூமில் வேலை செய்பவர், விஜயாவின் புகைப்படத்துக்கு மாலை போட்டு பூஜை செய்தார்கள். உடனே மனோஜ் திட்டி எடுத்து வைத்தார். அந்த சமயம் பார்த்து மனோஜின் ஓனர் ஃபோன் செய்து, நல்ல பிராஃபிட் கிடைத்திருக்கிறது என்று சொன்னவுடன் மீண்டும் விஜயின் புகைப்படத்தை வைத்து பூஜை செய்கிறார் மனோஜ். அப்போது வந்த மனோஜின் நண்பர், புது பங்களா விலைக்கு வருகிறது. வாங்கி போட்டு என்று சொல்ல மனோஜும் சரி என்றார். இத்துடன் சீரியல் முடிகிறது.