காரை விற்ற முத்து,சிட்டி வைத்த செக் – சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வார அப்டேட் இதுதான்.

0
143
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. சீரியலில் கதாநாயகன் முத்து. வீட்டில் அவருடைய தாய், அவருடைய முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும் தான் சப்போர்ட்செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான். இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. வழக்கம் போல் பணக்கார மாமியார் அராஜகம் நடக்கிறது. மேலும், முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண் ஸ்ருதியை திருமணம் செய்து கொள்கிறார். இறுதியில் ரவி- ஸ்ருதி இருவரையும் மீனா வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். முதலில் ரூம் பிரச்சினை வருகிறது. எப்படியோ அந்த பஞ்சாயத்து தீர்ந்து விடுகிறது. பின் வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

இதை பார்த்து முத்து, மீனாவிற்கு பூக்கடை போட்டு தருகிறார். இதனால் விஜயாவுக்கு கோபம் தாங்க முடியவில்லை. பின் மனோஜ் வீட்டில் வேலை பார்க்கிறேன் என்று பொய் சொல்லிக்கொண்டு பார்க்கில் சாப்பிட்டு, விளையாடிக் கொண்டு தூங்குவதை பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். ஒருவழியாக அந்த பஞ்சாயத்து முடிந்து மனோஜ் ஒரு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் வேலைக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் மீனாவின் தம்பி கல்லூரியில் படித்து வேலை செய்வதாக வீட்டில் போய் சொல்லி சிட்டி உடன் தேவையில்லாத சவகாசம் வைத்துக்கொண்டு இருக்கிறார்.

சீரியல் கதை:

இது முத்துவிற்கு தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் தன் அம்மாவிடம் பணத்தை திருடியது மீனாவின் தம்பி என்பதை தெரிந்து கொள்கிறார். ஆனால், இதை வீட்டில் சொன்னால் மீனாவிற்கு பிரச்சனை ஏற்படும் என்று சொல்லாமல் மீனா தம்பியிடம் முத்து பேசுகிறார். ஆனால், அவன் திமிராக முத்துவிடம் பேசி அனுப்புகிறார். பின் சிட்டி முத்துவின் நண்பர் வட்டி கட்டவில்லை என்று அவரை அடிக்கிறார். இதை பார்த்த முத்து சிட்டியை புரட்டி போட்டு எடுக்கிறார். அங்கு இருந்த மீனாவின் தம்பி எதிர்த்து கேட்டதற்கு முத்து அவனின் கையை முறித்து விடுகிறார்.

-விளம்பரம்-

முத்து-மீனா இடையே சண்டை:

பின் வீட்டில் எல்லோருக்கும் முத்து தான் மீனா தம்பி கையை உடைத்தது என்று தெரிய வருகிறது. ஆனால், ஏன் உடைத்தார் என்று முத்து சொல்லவில்லை. இதனால் மீனா- முத்துக்கிடையே விரிசல் ஏற்படுகிறது. ம் இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், சிட்டி தன்னிடம் வட்டிக்கு வாங்கி இருக்கும் முத்துவின் நண்பர்களிடம் மொத்த பணத்தையும் திருப்பி தர கேட்டிருக்கிறார். திருப்பி தரவில்லை என்றால் மொத்த பேருடைய காரை தூக்கி விடுவேன் என்று மிரட்டிருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இதனால் முத்து, இந்த பிரச்சினை உனக்கும் எனக்கும் அவர்களை தொந்தரவு செய்யாதே என்று சிட்டியிடம் சொல்கிறார். உடனே சிட்டி, நீ என் காலில் விழுந்து மன்னிப்பு கேள். அவர்களை விட்டு விடுகிறேன் என்று சொல்கிறார். அடுத்த நாள் சிட்டி மொத்த காரை தூக்க வருகிறார். அப்போது முத்து தன்னுடைய காரை விற்று நண்பர்களுடைய மொத்த பணத்தையும் சிட்டிக்கு செட்டில்மென்ட் செய்திருக்கிறார். இனி வரும் நாட்களில் முத்து கார் விற்ற விஷயம் வீட்டிற்கு தெரிய வருமா? மீனா தம்பி செய்யும் திருட்டு வேலை எல்லோருக்கும் தெரியுமா? மீனா- முத்து இணைவார்களா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement