விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ ஒன்று ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று ஏமாந்து மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் பாட்டிக்கு கிப்ட் வாங்க முத்து, மீனா நகையை வாங்கி கடைக்கு சென்று பார்த்தால் அது எல்லாம் கவரிங் என்று தெரிந்தது. பாட்டி பிறந்தநாள் முடிந்தவுடன் கவரிங் நகை விஷயத்தை அண்ணாமலை இடம் முத்து சொன்னார்.
அண்ணாமலை அதிர்ச்சியாகி விஜயாவிடம் கேட்டவுடன், எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும் என்று சொல்ல கோபப்பட்டு மீனா பேசி இருந்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும், ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார். மேலும், மனோஜை ஏமாற்றிய கும்பலை போலீஸ் கைது செய்து இருந்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்து முத்து வீட்டில் காண்பித்தார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நிற்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை:
இருந்தாலும், விஜயா சமாளித்து விட்டார். எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழம் என்று பொய் சொல்லி சாமி அறையில் வைத்தார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள். கடைசியில் விஜயா-மனோஜ் மாட்டி கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுக்கிறார். கடைசியில் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவை பார்த்து சொல்லி விடுகிறார்.
அண்ணாமலை எடுத்த முடிவு:
கோபத்தில் விஜயா கதவை மூடி கொண்டு வெளிவரவில்லை. பின் விஜயாவின் தோழி பார்வதி வந்து விஜயாவை வெளியே கூட்டி வந்து விடுகிறார். மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். பின் விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். எதுவும் பேசாமல் மீனா அழுது கொண்டு இருந்தார். கடைசியில் முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார்.
இன்றைய எபிசோட்:
ரோகினி அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில், மீனா எல்லோருக்குமே சமைத்து வைத்திருக்கிறார். ஆனால், விஜயா மீனாவை திட்டுகிறார். ஒருவழியாக எல்லோருமே சாப்பிடுகிறார்கள். விஜயா சாப்பிடுவதை பார்த்து அண்ணாமலை வேண்டாம் என்று சொல்லி சென்று விடுகிறார். பின் விஜயாவும் சாப்பிடவில்லை. பின் வெளியில் கிளம்பும் போது அண்ணாமலை மீனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் விஜயா ரொம்ப வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ் பொருட்களை திருட்டு கும்பலிடம் வாங்கிய நபர்கள் பணத்தை கொடுத்தால் தான் பொருள்களை தருவேன் என்று சொல்கிறார்கள்.
அண்ணாமலை-விஜயா சண்டை:
ரோகினியும் சரி என்று ஒத்துக் கொள்கிறார். இதையெல்லாம் கடையில் வேலை செய்தவர்கள் பார்த்து, இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம் என்று திட்டம் போடுகிறார்கள். வீட்டில் அண்ணாமலை இரும்பி கொண்டு இருப்பதை பார்த்து விஜயா தண்ணீர் கொடுக்கிறார். ஆனால், அதை வாங்காமல் மீனா கையில் தான் தண்ணீர் வாங்கிக் குடிக்கிறார் அண்ணாமலை. இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் அண்ணாமலை, விஜயாவை மன்னிப்பாரா? மனோஜ் மீண்டும் ஏமாறுவாரா? போன்ற பரபரப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டு இருக்கின்றது