நேற்று காலமான சிறுத்தை சிவாவின் தந்தையை பார்த்துளீர்களா ? அவர் யார் தெரியுமா ?

0
720
siruthai
- Advertisement -

இயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை நேற்று காலமாகி உள்ள சம்பவம் திரியுலகினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார் சிறுத்தை சிவா. இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 2011 ஆம் ஆண்டு கார்த்திக், தமன்னா நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த சிறுத்தை திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் வீரம், விவேகம், விசுவாசம் போன்று பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சிறுத்தை சிவா அவர்களின் தந்தை காலமாகி இருக்கிறார். இதனால் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வசித்து வந்த இவரது தந்தை ஜெயக்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜெயக்குமார் ஆவணப்பட புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது தந்தை ஏ.கே.வேலன் திரைத்துறையில் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் இருந்து மறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கிய பல படங்கள் அஜித்தை வைத்தது தான். அதுமட்டுமல்லாது இயக்குனர் சிவா அவர்கள் சினிமா உலகில் இயக்குனர் ஆவதற்கு முன்னரே நடிகராக இருந்துள்ளார். தற்போது அவர் நடிகராக நடித்த படத்தின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஆம், சிறுத்தை சிவா, இயக்குனர் ஆகும் முன் பல படங்களில் சிறு சிறு காட்சியில் நடித்துள்ளார். அந்த வகையில் விஜய்யின் பத்ரி படத்திலும் நடித்துள்ளார்.2001 ஆம் ஆண்டு அருண் பிரசாத் இயக்கத்தில் வெளியான பத்ரி திரைப்படம் விஜய்யின் வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் தனது அண்ணனுக்காக குத்துச்சண்டை வீரராக மாறியிருப்பார்.

மேலும் இந்த படத்தின் எண்ட் கார்ட்டில் நடிகர் விஜய், ஒருவரை தூக்கி கொண்டு ஓடுவர். அவரை இறக்கிவிட்டதும் விஜய்யின் பயிற்சயாளாரான ஷீகான் ஹூசைனி வேறு ஒரு நபரை கைக்காட்டி அவரை தூக்கிக்கொண்டு ஓட செல்லும்போது அவர் கையெடுத்துக் கும்பிடுவார்கள் அந்த காட்சியில் தோன்றியவர் தான் சிறுத்தை சிவா.சிறுத்தை சிவா இந்த படத்தில் மட்டுமல்ல நாராயணமூர்த்தி இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த மனதை திருடிவிட்டாய் படத்தில் கூட நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement