சிவாஜி இல்லம் ஜப்தி விவகாரம்: நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு – என்ன தெரியுமா?

0
120
- Advertisement -

சிவாஜி வீடு ஜப்தி தொடர்பாக நீதிமன்றம் போட்டு இருக்கும் உத்தரவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் சிவாஜி கணேசன். அவருடைய நடிப்பை யாராலும் மறக்க முடியாது. இன்றும் அவருடைய பெயர் உலகெங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. மேலும், சிவாஜிகணேசன் உடைய பேரனும் நடிகருமான துஷ்யந்த், அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் சேர்ந்து ஈசன் ப்ரொடக்சன் நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த நிறுவனம் சார்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து ஈசன் ப்ரொடக்ஷன் 3 கோடி 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனை வாங்கி இருந்தார்கள். இந்த கடனுக்காக ஆண்டுக்கு 30% வட்டியுடன் திருப்பி தருவதாகவும் ஒப்பந்தம் போட்டிருந்தார்கள். ஆனால், அதன்படி கடன் தொகையை திருப்பித் தரவே இல்லை. இதை அடுத்து தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் ஈசன் ப்ரொடக்ஷன் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.

- Advertisement -

ஜகஜால கில்லாடி பட விவகாரம்:

பின் வழக்கை விசாரித்த நீதிபதி, அசல் தொகை மற்றும் வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் தொகையை ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்படி கடந்த ஆண்டு உத்தரவிட்டிருந்தார்கள். அந்த உத்தரவின் படி ஜகஜால கில்லாடி பட உரிமைகள் எல்லாம் விற்று வரக்கூடிய பணத்தில் தங்களின் கடன் தொகையை எடுத்துக் கொண்டு மீதி தொகையை ஈசன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்கள். ஆனால், படத்தினுடைய வேலைகள் முழுமை அடையாததால் பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

நீதிபதி விசாரணை:

இதை அடுத்து சிவாஜிகணேசன் உடைய வீட்டை ஜப்தி செய்து ஏலம் விட வேண்டும் என்று தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஈசன் ப்ரொடக்ஷன் தரப்பில் அவகாசம் கொடுத்தும் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் சிவாஜி இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு அவர்கள் சிவாஜியின் அன்னை இல்லத்திற்கும் ராம்குமாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அன்னை இல்லம் முழுக்க முழுக்க எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

-விளம்பரம்-

சிவாஜி வீடு ஜப்தி:

தற்போது இந்த வீட்டினுடைய மதிப்பு 150 கோடி ஆகும். இதை அடுத்து நீதிமன்றத்தில், தன்னுடைய அண்ணன் வாங்கிய கடனை பிரபுவை திருப்பி கட்டிவிட்டு அதற்குப் பிறகு அவரிடம் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்கள். அதற்கு பிரபு, அவர் பல பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கெல்லாம் என்னால் உதவ முடியாது என்று கூறியிருக்கிறார். அதோடு சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று போட்டிருக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு:

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருக்கு. அதுமட்டுமில்லாமல் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளரும் பிரபு தான் என்றும் கூறியிருக்கிறார்கள். தற்போது சிவாஜி இல்லம் ஜப்தி விவகாரத்திற்கு முற்றுப்படி வைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement