பல கோடி தங்கம் மற்றும் வைர நகைகள், கோபாலபுரத்து வீடு – பிரபு,ராம் குமார் மீது சகோதரிகள் தொடர்ந்த வழக்கு. விவரம் இதோ.

0
1382
- Advertisement -

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் மீது அவருடைய சகோதரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்ற பெயரை யாராலும் மறக்க முடியாது. இவர் விழுப்புரத்தில் 1928-ம் ஆண்டு பிறந்தார். இவருடைய இயற்பெயர் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி. இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தான் நடித்துக்கொண்டிருந்தார். பின் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தமிழ் மொழியில் மட்டும் 250 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். நடிப்பு என்ற பெயரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றவர் சிவாஜி என்று கூறினால் அது மிகையாகாது. தமிழ் சினிமா என்ற ஒன்று தொடங்கிய காலத்தில் தன் நடிப்பின் மூலம் மக்களை வியப்பிலும், ஆச்சர்யத்திலும் அடைய செய்தவர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாரும் நிகர் இல்லை என்று தான் சொல்லணும்.

- Advertisement -

சிவாஜி கணேசன் குறித்த தகவல்:

கடைசியாக இவர் நடித்த படம் படையப்பா. இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்று தான் சொல்லணும். இவருடைய மகன் பிரபு. இவர் தன் தந்தையைப் போல் இல்லை என்றாலும் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விக்ரம் பிரபு. தற்போது விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒருவர் சினிமாவில் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் சொத்துக்கள் தொடர்பாக அவருடைய சகோதரிகள் தொடர்ந்து இருக்கும் வழக்கு சோசியல் மீடியாவில் வெளியாகிறது.

சிவாஜி கணேசனின் சொத்துக்கள் :

சிவாஜி கணேசன் தான் நடிகராக இருந்தபோது பல இடங்களில் சொத்து வாங்கி இருந்தார். அதனுடைய இன்றைய மதிப்பு 271 ஒரு கோடி ஆகும். சிவாஜிக்கு ராம்குமார்,பிரபு,சாந்தி, ராஜ்வி என்று நான்கு பிள்ளைகள். மேலும், சிவாஜி மறைவுக்குப் பின்பு அவருடைய வாரிசுகள் அவருடைய சொத்துக்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துகளை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களுடைய மகள்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

-விளம்பரம்-

வழக்கு தொடர்ந்த மகள்கள்:

அதில் அவர்கள் கூறியிருப்பது, என்னுடைய தந்தை சிவாஜி சம்பாதித்த சொத்து தொடர்பாக அவர் உயில் எழுதி வைக்காத நிலையில் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து எங்களை ஏமாற்றி பல சொத்துக்களை விற்று விட்டார்கள். எங்களின் தாய்வழி சொத்துக்களில் கூட எங்களுக்கு பங்கு வழங்கவில்லை. அவர் சேர்த்து வைத்த சுமார் 10 கோடி மதிப்புள்ள 1000 பவுன் தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்களையும் எங்களுக்கு தராமல் ஏமாற்றிவிட்டார்கள். இதுபோல கோபாலபுரத்தில் இருந்த வீட்டை 5 கோடி ரூபாய்க்கு பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் விற்றுவிட்டார்கள்.

மனுவில் கூறி இருப்பது:

ராயப்பேட்டையில் உள்ள நான்கு வீடுகள் மூலம் வரும் வாடகையில் கூட எங்களுக்கு எந்த பங்கும் வழங்கவில்லை. இந்து வாரிசுரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் எங்களுக்கும் உரிமை உள்ளதால் இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டு பாகப்பிரிவினை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். மேலும், இந்த வழக்கில் பிரபு மற்றும் ராம்குமாரின் மகன்கள் விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோரையும் எதிர் மனுதாரராக சேர்க்கபட்டிருக்கிறார்கள்.

Advertisement