தற்போது பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சீமாராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்து, ஒரு சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர்
ரவிக்குமார் இயக்குகிறார்.
இந்த படத்திற்கு ரஜினியின் 2.0 படத்தில் வேலை செய்த டெக்னீசியன்கள் வேலை செய்ய உள்ளனர். முதலில் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து பெருமை சேர்க்கவுள்ளார்.
மேலும், 2.0 படத்தில் வேலை செய்த நீர்வ் ஷா சிவகார்த்திகேயனின் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படி ரஜினியின் 2.0 படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்திலும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.




