சிவகார்த்திகேயன் பட இயக்குனர் வீட்டில் நேர்ந்த சோகம் – படக்குழு இரங்கல்.

0
858
ravikumar
- Advertisement -

ஹீரோ படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், டாக்டர், அயலான், டான் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். இயக்குனர் ரவிக்குமார், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இன்று நேற்று நாளை ‘ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் ஜோடியாக நடித்திருந்தார். மேலும் கருணாகரன், ஜெயப்பிரகாஷ், ரவி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-
SivaKarthikeyan's Ayalaan Movie First Look Posters - Social News XYZ

இத்திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. முதல் படமே அறிவியல் புனைவு படமாக எடுத்து அதில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் காரணமாக படம் அப்படியே நின்று விட்டது என்று கூட தகவல்கள் வெளியானது.

- Advertisement -

பின்னர் இந்த படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் ரவிக்குமாரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமாகியுள்ளார். அவரது மறைவு குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரவிக்குமாரின் தாயார் மரணத்தை அவரது நண்பரும் இயக்குநருமான கௌரவ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இரங்கல் செய்தி பதிவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து திரையுலகினர் பலரும் இயக்குநர் ரவிக்குமாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement