சிவகார்த்திகேயன் செய்த உதவியால் உயிர்பிழைத்த ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ பட யானை – பலரும் அறிந்திடாத தகவல்

0
335
- Advertisement -

தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் பட யானை நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் தான் உயிர்பிழைத்திருக்கும் தற்போது தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை காட்டில் இருக்கும் யானைகளை வைத்து தான் The Elephant Whisperers என்ற குறும்படம் எடுக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பொம்மி, ரகு ஆகிய இரண்டு யானை குட்டிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

பிறந்த ஒரு சில மாதமே ஆன நிலையில் இந்த யானை குட்டிகள் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், இந்த யானை குட்டிகளை வளர்த்து வருபவர்கள் தான் பொம்மண் மற்றும் அவருடைய மனைவி பெள்ளி. இவர்கள் இந்த யானை குட்டிகளை எப்படி எல்லாம் பராமரிக்கிறார்கள்? அதன் மீது எப்படி அன்பு செலுத்துகிறார்கள்? என்பது குறித்த ஆவண படமாக தான் இந்த The Elephant Whisperers உருவாகியிருந்தது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு நெட்ப்ளிக்சில் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

The Elephant Whisperers படம்:

இந்த படத்தை கார்திகி கோன்சால்வ்ஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் குறித்து பல பிரபலங்கள் பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் தான் சில தினங்களுக்கு முன்பு The Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் எடுத்த இந்த குறும்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இது இந்தியாவிற்கு மட்டும் இல்லாமல் தமிழகத்திற்கும் பெருமையை சேர்த்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பெற்ற படம்:

மேலும், இந்த ஆவணப்படம் தற்போது உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆவணப்படத்தில் நடித்த யானைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்த தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, ஆவண படத்தில் இடம்பெற்ற இரண்டு யானைகளில் ரகு என்ற யானை கடந்த 2017 ஆம் ஆண்டு ஓசூர் அருகே மீட்கப்பட்டிருந்தது. இந்த யானை குட்டி தாயிடம் இருந்து பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தது.

-விளம்பரம்-

யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை:

இந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு முதுமலைக்கு கொண்டு சென்றிருந்தனர். அப்போது உடல்நலம் குன்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த ரகு யானை இருந்தது. இதை காப்பாற்ற காஸ்ட்லியான மருந்துகள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அந்த சமயத்தில் இந்த தகவல் சிவகார்த்திகேயனிடம் சென்றிருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயன் அந்த யானை குட்டிக்கு தேவையான உதவியை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருடன் பிரபல ஜோதிடன் ஷெல்வியும் செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் செய்த உதவி:

பின் அந்த யானை கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு வந்திருக்கிறது. இந்த தகவலை ஊட்டியை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கூறியிருந்தார். தற்போது ஆஸ்கர் விருது பெற்ற ரகு என்ற யானைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் தான் பிழைத்து இருக்கு என்ற தகவல் வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள், அவருடைய நல்ல உள்ளத்திற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் விலங்குகள் மீது அதிக பிரியம் கொண்டவர் என்பது பலரும் அறிந்ததே. இதனால் இவர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு யானை மற்றும் சிங்கத்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement