திடீரென நிறுத்தப்பட்ட சிவகார்திகேகயன் SK 21 படத்தின் படப்பிடிப்பு. காரணம் என்ன தெரியுமா?

0
1541
- Advertisement -

சிவகார்த்திகேயனின் எஸ் கே 21 படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை அடுத்து இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் பிரின்ஸ்.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். இப்படத்திற்கு பரத் சங்கர் இசை அமைகிறார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. மேலும், இந்த படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் தான் அறிவித்திருக்கிறது. மேலும், பிரின்ஸ் படம் படுதோல்வி அடைந்ததால் மாவீரன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் அயலான். இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-

எஸ்கே 21 படம்:

இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் எஸ்கே 21 என்று கூறப்படுகிறது. மே ஐந்தாம் தேதி தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ராணுவ அதிகாரியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தினுடைய முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது.

திடீரென படப்பிடிப்பு நிறுத்தம்:

இந்த நிலையில் எஸ்கே 21 படம் நிறுத்தப்பட்டிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, எஸ்கே 21 படத்தினுடைய படப்பிடிப்பு 55 நாட்களுக்கு திட்டமிட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் 10 நாட்களிலேயே படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டார்கள். ஏன்னா, ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதனால் பல அரச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக நிகழ்ச்சியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் படப்பிடிப்பிற்கு தடை வித்தித்து. ஆகவே, எஸ் கே 21 படத்தின் படக்குழுவினர் சென்னைக்கு திரும்பிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Advertisement