தன் மகன் பிறந்தநாளில் பல ஆண்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன் – நெகிழ்ச்சியில் அருண் விஜய் போட்ட பதிவு.

0
823
arunvijay
- Advertisement -

பல ஆண்டுகளாகவே சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இருவரும் பிரச்சனை இருக்கிறது என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அதை முறியடிக்கும் விதமாக சிவகார்த்திகேயனின் பதிவு அமைந்துள்ளது. தன்னுடைய கடின உழைப்பினாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is as.jpg

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அருண் விஜய்யின் மறைமுக ட்வீட் :

இதனை தொடர்ந்து தற்போது உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். இப்படி சினிமாவில் சிவா உச்சத்தில் இருந்தாலும் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் சினிமா உலகில் நுழைய பல போராட்டங்களையும் அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அருண் விஜய் சிவகார்த்திகேயன் குறித்து மறைமுக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.

sk

யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்ல :

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அருண் விஜய்யை தாக்கி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-

அருண் விஜய் கொடுத்த விளக்கம் :

ஆனால், அருண் விஜய் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தார். இருப்பினும் அருண் விஜய், சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் அந்த பதிவை போட்டார் என்று பலரும் தற்போது வரை நினைத்துகொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு அருண் விஜய் மற்றும் சிவகார்திகேயன் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

வாழ்த்து சொன்ன Sk :

அருண் விஜய்யின் மகன் அர்னவ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அருண்விஜய் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் அருண் விஜய்யின் இந்த பதிவிற்கு ட்வீட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி, ஓ மை டாக் படத்தில் உன்னுடைய நடிப்பை மிகவும் ரசித்தேன். உனது படிப்பிற்கும் சினிமா வளர்ச்சிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டு இருந்தார்.

அருண் விஜய்யின் நெகிழ்ச்சியான பதில் :

சிவகார்த்திகேயனின் இந்த பதிவை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் ‘உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரதர். அர்னவ்விற்கு உங்கள் கனிவான வாழ்த்துக்களை நிச்சயம் தெரிவிக்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் சமீபத்தில் தான் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். புதுமுக இயக்குனர் சரோவ் சண்முகம் இயக்கத்தில் வெளியான ஓ மை டாக் திரைப்படம் சமீபத்தில் ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement