சால்வை போட வந்த பெரியவர், சால்வையை பிடிங்கி எரிந்த சிவகுமார் – வைரலாகும் வீடியோ.

0
189
- Advertisement -

மேடையில் ரசிகர் கொடுக்க வந்த சால்வையை நடிகர் சிவகுமார் பிடுங்கி வீசி எரிந்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் சிவக்குமார். இவர் ஒரு காலத்தில் படங்களில் ஹீரோவாக நடித்து இருந்தார். பின் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இருக்கிறார் சிவகுமார். மேலும், இவர் மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகர் சிவகுமார் 1965 காலகட்டத்தில் இருந்தே நடித்து வருகிறார். துணை கதாபாத்திரம் துவங்கி ஹீரோ, வில்லன் என்று பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார். இவர் சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார். தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி, பந்தம், சித்தி, அண்ணாமலை போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்து இருக்கிறார் சிவகுமார்.

- Advertisement -

சிவகுமார் குறித்த தகவல்:

பின் இவர் பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கான காரணத்தையும் அவர் இது வரை கூறியதும் இல்லை. இவருடைய மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்கள் படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமார் செய்திருக்கும் செயல்தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது.

நூல் வெளியீட்டு விழா:

அதாவது, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டத்தில் பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிவகுமார் கலந்து கொண்டிருந்தார். மேடையில் அவர், பழ கருப்பையா குறித்து பல விஷயங்களை புகழ்ந்து பேசி தன்னைவிட இரண்டு வயது குறைவாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது தவறில்லை என்று அவர் காலில் விழுந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சிவகுமார் செய்தது:

இதனை அடுத்து மேடையில் சிவகுமாரின் ரசிகர் ஒருவர், அவருக்கு சால்வை கொடுக்க நின்றிருந்தார். இதை பார்த்து சிவகுமார், அந்த ரசிகருடைய கையில் இருந்த சால்வையை வேகமாக பிடுங்கி கீழே போட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. ஏற்கனவே, விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க வந்தபோது அவருடைய போனை போனை சிவகுமார் தள்ளி விட்டிருந்தார்.

நெட்டிசன்கள் கேள்வி:

அது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மீண்டும் சிவகுமார் தன்னுடைய ரசிகர்களிடம் இப்படி நடந்து கொண்டிருப்பது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. பலருமே, வயதான நபர் என்று கூட பார்க்காமல் சிவகுமார் செய்தது ரொம்ப தவறு. இவரின் செயலை பார்த்து அந்த நபருடைய முகமே வாடிவிட்டது. ஒரு நடிகர் என்பதைவிட ஒரு மனிதராக சிவகுமார் நடந்து கொள்வது சரியா?என்றெல்லாம் நெட்டிசன் கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Advertisement