பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சம் இருக்காது. இந்தி மட்டும் தெலுங்கில் இரண்டாவது சீசன் எட்டியுள்ள இந்த நிகழ்ச்சி இந்தியில் 11 சீசன்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் சீசனில் கலந்து கொண்ட நடிகை சோபியா தனது கணவர் மீதே செக்ஸ் டார்ச்சர் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியில் 11 சீசன்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சிகளை இதுவரை பாலிவுட் பிரபலங்களான ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்றவர்கள் தொகுத்து வழங்கியுள்ளனர். இதில் கடந்த 2013 ஆம் ஆண்டு சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை சோபியா ஹயாத்.
பாலிவுட் நடிகையான இவர், ஒரு சில இந்தி படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ரோமானிய நாட்டை சேர்ந்த விளாட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணமான ஒரு வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர் என்று அனைவரும் கூறி வந்தனர்.
ஆனால், தனது கணவர் விளாட்டை பிரிந்த உண்மை காரணத்தை பற்றி சமீபத்தில் தெரிவித்துள்ள நடிகை சோபியா ” திருமணத்திற்க்கு பின்னர் நான் கர்ப்பமாக இருந்த போது என்னை செக்ஸ் டார்ச்சர் செய்தார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் என் கழுத்தை நெரித்து கொள்ளலும் அளவிற்கு சென்றார். அவருடன் நான் வாழ்ந்திருந்தால் என்னை கொன்றிருப்பார். நல்ல வேலை அவரிடம் இருந்து நான் தப்பித்து விட்டேன்” என்று விளாட் மீது திடுக்கிடும் குற்றசாட்டை கூறியுள்ளார்.