பாரத பிரதமர் மோடி எழுதிய “கர்பா” பாடல் – இசை வீடியோ வெளியீடு.

0
1052
Modi
- Advertisement -

பிரதமர் மோடி எழுதிய கர்போ பாடல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. ராஸ் கர்பா இசையில் பகவான் கிருஷ்ணர் மற்றும் கோபியர்களுக்கு இடையேயான உறவுகளின் கதைகள் மற்றும் உணர்ச்சிகளை இந்த விழாவில் சொல்லப்படும்.

-விளம்பரம்-

இந்த விழா குஜராத் மாநிலம் உட்பட பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வருடம் வருடம் இந்து மக்களால் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை நவராத்திரி பண்டிகை முதல் நாள் துவங்குகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி எழுதிய பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

கர்பா பாடல்:

அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் கர்பா என்ற பாடல் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலை கார்போ என்ற தலைப்பில் பாடகி த்வனி பனுஷாலி பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்து இருக்கிறார். இந்த பாடல் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியால் நிறுவப்பட்ட ஜஸ்ட் மியூசிக் என்ற இசை லேபிளின் கீழ் வீடியோவாக வெளியிடப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

பாடகி த்வானி பானுஷாலி பதிவு:

இந்தப் பாடல் கலாச்சார பண்புகத் தன்மை ஒற்றுமை ஆகியவற்றை கூறுகிறது. இந்த பாடல் 3 நிமிடம் 10 வினாடிகள் கொண்டதாக இருக்கிறது. இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்திருக்கிறது. மேலும், இந்த பாடல் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பாடகி த்வானி பானுஷாலி, பிரதமர் மோடியால் எழுதப்பட்ட இந்த கர்பா பாடலை இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சியும் நானும் ரொம்ப ரசித்தோம்.

பாடலின் தயாரிப்பாளர் பதிவு:

இதேபோல புதிய தாளம், அமைப்பு மற்றும் சுவையுடன் ஒரு பாடலை உருவாக்க விரும்புகிறோம். இந்தப் பாடல் வீடியோவை வெளியிட்டு எங்களுக்கு வாழ்க்கை உயிர்பிக்க உதவிய இசை லேபிளுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி, மோடியுடன் பணியாற்றியது எனக்கு பெருமை என்று கூறி இருக்கிறார். மேலும், இந்த கர்பா பாடலை பிரதமர் மோடி டீவ்ட்டரில் பகிர்ந்து, இந்த பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

மோடி பதிவு:

இது பல நினைவுகளை திரும்பக் கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நான் எழுதவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பாவை எழுத முடிந்தது. அதை நவராத்திரி போது பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பாடல் வெளியானது தொடர்ந்து பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பாடலை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement