இரண்டாம் திருமணம் செய்து மூன்று பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் செல்வராகவன் – மறுமணம் குறித்து பேசிய சோனியா அகர்வால்.

0
927
selvaragavan
- Advertisement -

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் தமிழ் சினிமா உலகில் ஒரு நிலையான இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் மூலம் இயக்குனர் ஆனார். அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் தான் சோனியா அகர்வால் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வால் நடித்திருந்தார். இதனால் செல்வராகவன்-சோனியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

- Advertisement -

செல்வராகவன்-சோனியா அகர்வால் திருமணம்:

பின் இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது. பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர். இவருக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டது.

sonia

விவாகரத்து :

மேலும், திருமணம் செய்துகொண்ட சில வருடங்களிலேயே செல்வராகவன்- சோனியா அகர்வால் ஜோடி பிரிவதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தது ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தன.பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் நல்ல நண்பர்களாக உள்ளனர். விவாகரத்திற்குப் பிறகு சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சோனியா அகர்வாலை பிரிந்த செல்வராகவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு மூன்று பிள்ளைகளும் இருக்கிறது. ஆனால், செல்வராகவனை பிரிந்த சோனியா அகர்வால் தற்போது வரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார். அதே போல சோனியா அகர்வால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட எஸ்.பி.பி.சரணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அவரை சோனியா அகர்வால் மணக்க இருப்பதாகவும் பேசப்பட்டது.

மறுமணம் குறித்து சோனியா அகர்வால் :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள சோனியா அகர்வால் ‘”ஒரு தொடரில் நானும், எஸ்.பி.பி.சரணும் நடித்த திருமண காட்சி புகைப்படம் வெளியாகி நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்தியை பரப்பினர். எனக்கு நிறைய பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? என்று விசாரித்தனர். நான் இல்லை என்று மறுப்பு சொன்னேன். எத்தனை நாட்கள் தனியாக இருப்பேன் என்று தெரியவில்லை. பொருத்தமான நபரை சந்திக்கும்போது திருமணம் நடக்கலாம். இதுவரை அப்படிப்பட்டவரை சந்திக்கவில்லை. அந்த நபருக்காக காத்து இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement