என் காதல் செத்து போச்சு- விவாகரத்து குறித்து முதன் முறையாக மனம் திறந்த சோனியா அகர்வால்

0
615
- Advertisement -

என்னுடைய காதல் செத்துப் போய்விட்டது என்று தன்னுடைய விவாகரத்து குறித்து மனம் திறந்து சோனியா அகர்வால் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90ஸ் மற்றும் 2k ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகளில் ஒருவர் சோனியா அகர்வால். இவர் சண்டிகாரை சேர்த்தவர். இவர் 1982 ஆம் ஆண்டு பிறந்தவர். மாடலிங்கில் கொடிகட்ட பறந்த இவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் செய்து வைத்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் சோனியா அதர்வால் அவர்கள் சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, 7g ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த சோனியா தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சோனியா அகர்வால் – செல்வராகவன்:

பின்னர் சோனியா அகர்வால் , இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் 2006ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண பந்தம் 2010வரை மட்டுமே நீடித்தது. பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர். சோனியாவுக்கு இருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர்.

சோனியா அகர்வால் திரைப்பயணம்:

விவாகரத்திற்குப் பிறகு சோனியா அகர்வாலுக்கு தொடர்ந்து ஹீரோயினியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு இவர் தொலைக்காட்சிகளில் தொடர்களில் கூட நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு சோனியா அகர்வால் நடித்திருந்த படம் கிராண்மா.

-விளம்பரம்-

சோனியா அளித்த பேட்டி:

இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷிஜின்லால் எஸ்எஸ் இயக்கி இருந்தார். இது ஒரு ஹாரர், சஸ்பென்ஸ் திரில்லர் படம். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது இவர் மீண்டும் படங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சோனியா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்து கூறியிருந்தது, என்னுடைய விவாகரத்து குறித்து பல சர்ச்சைகள் சோசியல் மீடியாவில் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. இயக்குனர் செல்வராகவன் முரட்டு பிடிவாதம் உடையவர். ஆனால், அவர் சொந்த வாழ்க்கையில் அப்படி இல்லை.

செல்வராகவன் குறித்து சொன்னது:

அவர் அமைதியானவர். எப்போதும் கதை, வசனம் எழுதிக் கொண்டு பிஸியாகவே இருப்பார். எங்களுடைய திருமண வாழ்க்கை முடிந்ததற்கு காரணம் என்ன என்பது எனக்கும் அவருக்கும் மட்டும் தான் தெரியும். இப்போது அவர் செல்லும் வழியில் எப்படி சந்தோஷமாக இருக்கிறாரோ அப்படி தான் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். கணவன் மனைவியாக இருந்து பிரிந்த நாங்கள் நண்பர்களாக தொடர்வது நடக்காத காரியம். அவர் என் கண்களுக்கு நண்பராக தெரியமாட்டார். காதல் செத்துப் போன பிறகு நண்பராக பார்க்க முடியாது. வாழ்க்கையில் மறுபடியும் அவர் முகத்தை பார்க்க மாட்டேன். திருமணமான ஆரம்பத்தில் நான் நடிக்க கூடாது என்று அவருடைய குடும்பத்தினர் நிபந்தனை போட்டார்கள். அதனால் சினிமாவை விட்டு ஒதுங்க வேண்டியிருந்தது. விவாகத்திற்கு பிறகு நான் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement