நடிகை சோனியா அகர்வால் சண்டிகாரை சேர்த்தவர். மார்ச் 28 1982ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு தற்போது 35 வயதாகிறது. அங்கு உள்ள பாரம்பரிய பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர். சண்டிகாரில் தன் வீட்டின் பக்கத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் போதே நாடகத்தில் நடித்து தன் திறமையை வளர்த்தவர் சோனியா. பின்னர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லும்போது மாடலிங் செய்துள்ளார் சோனியா அகர்வால்.
பின்னர் மாடலிங்கில் கொடிகட்ட பறந்த அவரை இயக்குனர் செல்வராகவன் அழைத்து வந்து தன்னுடைய காதல் கொண்டேன் படத்தில் அவருக்கு அறிமுகம் கொடுத்தார். இவர் தமிழில் அறிமுகமாகி இருந்தாலும் முன்னரே தெலுங்கிலும் கன்னடத்திலும் ஒரு தலா ஒரு படம் நடித்துள்ளார்.
ஆனால் தமிழில் வெளியான காதல் கொண்டேன் படம் இருக்கு ஒரு ப்ரேக் கொடுத்தது. அதன் பின்னர் முன்னணி நடிகையாக இவர், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர, பின்னர் 7G ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, திருட்டு பயலே உள்ளிட்ட ஹிட்டான படங்களில் நடித்தார்.
இவர் தமிழில் நடித்த முதல் படத்திலேயே IFTA சிறந்த யது நடிகை அவார்ட் கிடைத்தது. 7G ரெயின்போ காலனி படத்திற்காக பிலிம்பேர் பெஸ்ட் தமிழ் நடிகை விருது பெற்றார் சோனியா அகர்வால்.
பெரும்பாலும் தமிழ் படங்களில் மட்டுமே நடித்த சோனியா, தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடித்தார். பின்னர், 2006ல் இயக்குனர் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதலினால் அவருடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டார் சோனியா அகர்வால்.
படங்களை தவிற 2008ல் நாணல் என்ற ஒரு சீரியலிலும், 2013ல் மல்லி என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
இவர்களது திருமண வாழ்க்கை 2010வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் உடல் குண்டானதால், அதனை குறைக்க சில வருடங்களாக முயற்சி செய்து குறைத்தார்.
மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்க முயற்சி செய்து, 2011ல் வானம் மற்றும் சதுரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், ரீ என்ட்ரி கொடுத்த போது 30 வயதே ஆன சோனியாவல் மீண்டும் ஹீரோயின் இடத்தை பிடிக்க முடியவில்லை. த்ரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோர் 30யை தாண்டியும் ஹீரோயுனாக கலக்கி வருகின்றனர்.
பின்னர் தமிழில் ஒரு நடிகையின் வாக்குமூலம், மலையாளத்தில் கிரகநாதன், தெலுங்கில் டெம்பர், வின்னர், கன்னடாவில் ரன்னா, ஆகிய படங்களில் சின்ன சின்ன சப்போர்ட்டிங் ரோலில் நடித்தார். தற்போது மலையாளத்தில் அகல்யா என்ற ஒரு தனித்துவமான படத்தில் நடித்து வருகிறார் சோனியா.சோனியாவிற்கு விவாகரத்து ஆன பின்னர் அவரது மைத்துனர் தனுஷ்’தான் அவரை பார்த்துக்கொண்டர் எனவும் கூறப்படுகிறது.