சினிமாவை பொறுத்த வரை எத்தனையே நடிகர் நடிகைகள் இளம் வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கின்றனர். அப்படி அறிமுகமான பலர் தற்போது ஹீரோ ஹீரோயினாக கூட நடித்து வருகிறார்கள். அவ்வளவு ஏன் நடிகை மீனா சிறு வயதில் ரஜினி படத்தில் நடித்து பின்னர் பின் நாளில் ரஜினிக்கே ஜோடியாக நடித்துள்ளார். அந்த வகையில் புகைப்படத்தில் இந்த சூர்யா பட நடிகை சூர்யாயாவின் முதல் படமான நேருக்கு நேர் படம் வெளியான போது வெறும் இரண்டு வயது தான்.
அட, வேறு யாரும் இல்லை நடிகை அபர்ணா முரளி தான். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் அபர்ணா பாலமுரளி. 2015-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படம் ‘ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா’. இந்த படத்தினை இயக்குநர்கள் ஜெக்ஸ்சன் ஆண்டனி – ரெஜிஸ் ஆண்டனி இணைந்து இயக்கியிருந்தனர். இதில் அம்ரிதா உன்னி கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இது தான் அபர்ணா பாலமுரளி அறிமுகமான முதல் மலையாள திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து இவர் நடித்த மலையாள படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இதில் ஹீரோவாக ஃபஹத் ஃ பாசில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.’மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்கு பிறகு மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை அபர்ணா பாலமுரளி, அடுத்ததாக தமிழ் திரையுலகில் நுழையலாம் என முடிவெடுத்தார். தமிழில் 2017-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’. இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வெற்றி நடித்திருந்தார். வெற்றிக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி டூயட் பாடி ஆடியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘சர்வம் தாள மயம்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் நடிகை அபர்ணா பாலமுரளி. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கியிருந்தார். இப்போது சூர்யாவிற்கு ஜோடியாக ‘சூரரை போற்று’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். நடிகை அபர்ணா முரளி பிறந்தது 1995 ஆம் ஆண்டு.அதே போல சூர்யா முதன் முதலில் நடிகராக அறிமுகமான ‘நேருக்கு நேர் ‘ படம் வெளியானது 1997 ஆம் ஆண்டு. அப்படி பார்த்தால் அந்த படம் வெளியான போது அபர்ணா முரளிக்கு வெறும் 2 வயது தான்.