சூர்யா நடிப்பில் இறுதி சுற்று சுதா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாகவே உலகில் மிக பிரபலமான சாதனையாளர்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சமீப காலமாகவே அனைத்து சினிமா திரை உலகிலும் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்களை தந்து வருகிறார்கள். அதிலும் பெயர் மறந்த இந்தியர்களை வைத்து படம் உருவாக்குவது சினிமாவில் அவ்வபோது தான் நிகளும். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ திரைப்படமும் சாதனை படைத்த இந்தியர் ஒருவரின் வாழ்கை சம்பவம் தான்.
இந்த படம் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஒரு சாதாரண மனிதன், அவனின் மலிவு விலை விமான டிக்கெட் கனவு, ஏர் ஒட்டுகிறவனும் ஏரோ பிளானில் பறக்க வைக்க வேண்டும் என்ற ஒரு லட்சியம்.இது தான் சூரரை போற்று படத்தில் வரும் நெடுமாறனின் கதாபாத்திரம்.அதே போல இந்த படத்தின் பல காட்சிகள் ஒரு முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடும். அதேபோல இந்த படத்தில் ஒரு காட்சியில் தோன்றிய நடிகர் நடிகைகள் கூட சமீபத்தில் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
அந்த வகையில் இவரும் ஒருவர் தான். இந்த படத்தின் இறுதி காட்சியில் பைலட் உடையை அணிந்து கொண்டு இதே பெண் ஒரு சிறு காட்சியில் மிகவும் கெத்தாக நடந்து வருவார். ஆனால், உண்மையில் இவர் ஒரு பைலட் என்பது பலரும் அறிந்திராத ஒன்று. இவருடைய பெயர் வர்ஷா நாயர். கேரளாவில் பூர்வீகமாக கொண்ட கோயம்பத்தூரில் படித்து பின்னர் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து பேசியுள்ளார்.
அதில், தனது தந்தை திருச்சியில் flight traffic controller-ஆக பணியாற்றியதால், அடிக்கடி தான் ஏர் போர்ட் செல்வேன் என்றும். 3 ஆம் வகுப்பு படித்த போதே ஒரு பைலட் ஆக வேண்டும் என்று ஆசை வந்ததாக கூறியுள்ளார். மேலும், விஸ்காம் படிப்பை படித்து முடித்துவிட்டு பைலட் ஆக வேண்டும் என்று வீட்டில் சொன்னதும் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் எதோ விளையாட்டிற்கு சொல்கிறேன் என்று நினைத்தார்கள். மேலும், என்னுடைய அப்பா எனக்கு ஒரு கண்டிஷன் போட்டார். பைலட் பரீட்சையை ஒரே அட்டம்ப்ட்டில் பாஸ் செய்ய வேண்டும் என்று இதனால் நான் ஒரு மூன்று மாதம் கடுமையாக படித்து ஒரே முயற்சியில் பாஸ் ஆகி விட்டேன் என்று கூறியுள்ளார்.
அதே போல ப்லைட்டுக்கு யார் ஓட்டுகிறார்கள்வ? அது ஆணா பெண்ணா என்பது தெரியாது என்று கூறியுள்ள வர்ஷா, பெண்கள் அனைவரும் 9 டு 5 வேலைக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என்பதை இந்த சமூகத்தில் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். அதே போல தனது பைலட் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபத்தை பற்றி பேசிய வர்ஷா. ஒவ்வொரு பைலட்டுக்கும் ட்ரைனிங் முடிந்ததும் அவர்களுக்கு ஒரு தனி விமானம் கொடுக்கப்பட்டு ஓட்ட சொல்வார்கள். அது எந்த ஒரு பைலட்டாலும் மறக்க முடியாது. எனக்கு அப்படி ஓட்ட கொடுத்த போது நான் சந்தோஷத்தில் பாடல் பாடினேன் என்று கூறியுள்ளார் வர்ஷா.