இப்போல்லாம் என் குழந்தைங்க கூட என்ன பாத்து இப்படி கேக்குறாங்க – விஷ்ணு விஷால் தந்தை தொடர்பான வழக்கு குறித்து சூரி.

0
453
soori
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பது சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சூரி அவர்கள் தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அது போல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்தி காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூரி அவர்கள் விஷ்ணு விஷாலின் தந்தை மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ள தகவல் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கடந்த 2015 ஆம் ஆண்டு அன்புவேல்ராஜன் தயாரிப்பில் ‘வீர தீர சூரன்’ என்ற படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்க அந்த படத்தில் காமெடி நடிகராக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

- Advertisement -

அப்போது நடிகர் சூரிக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால், பேசப்பட்ட சம்பளம் பணத்திற்கு பதிலாக இன்னும் சில கோடிகள் கொடுத்தால் அந்த பணத்தில் நிலம் வாங்கித் தருவதாக படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், விஷ்ணு விஷாலின் தந்தையான ஓய்வுபெற்ற டிஜிபி ரமேஷ் கூறி இருக்கிறார்கள்.இதனால் நடிகர் சூரியும் நம்பி பணத்தை கொடுத்து இருக்கிறார். பின் சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக சொல்லி அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து சூரியை ஏமாற்றி இருக்கிறார்கள்.

பிறகு சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு முன்னாள் டிஜிபி ரமேஷுக்கு ஆதரவாக நகர்கிறது என்று சூரி கோர்ட்டில் முறையிட்டு இருந்தார். மேலும், இந்த வழக்கு சில காலமாக நடந்து வருவதால் விசாரணையை மத்திய குற்றப்பிரிவில் இருந்து சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சூரி வழக்கு தொடர்ந்தார்.

-விளம்பரம்-

இந்த மோசடி புகாரில் தற்போது வரை 4 முறை நடிகர் சூரி சென்னை மத்திய குற்றபிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார். தற்போது 4-வது முறையாக ஆஜராகிய சூரியிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சூரி முன்பெல்லாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் ஷூட்டிங் போயிட்டு வரியான்னு கேப்பாங்க. ஆனா, இப்பலாம் வீட்டை விட்டு வெளியே சென்று வந்தால் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வரீங்களா குழந்தைங்க கேக்குறாங்க.

 முதல் முறை வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. மறுபடியும் வந்தேன் விசாரணை நடந்தது. இப்போ வந்தேன். இப்போதும் விசாரணை நடந்தது. நீதிமன்றம், கடவுள் மீது நம்பிக்கை உள்ளது விசாரணை நியாயமாக நடந்தா போதும். இந்த பண மோசடி வழக்கில் நடிகர் சூரி 4 முறை விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார். ஆனால், விஷ்ணு விஷாலின் தந்தை ஒரு முறை கூட ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement