ஐஸ்வர்யாவை தொடர்ந்து ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் போலீசில் புகார் – இதான் காரணம்.

0
440
Soundarya
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த நகைகளை திருடியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டு பணியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவும் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யாவின் லாக்கரில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வைரம், நவரத்தின கற்கள், தங்க நகைகள் எல்லாம் காணாமல் போய் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

அதில், 2019 ஆம் ஆண்டு தன்னுடைய தங்கை சௌந்தர்யா திருமணத்தில் நகையை போட்டிருந்தேன். அதற்கு பிறகு தனி லாக்கரில் அந்த நகைகளை வைத்தேன். அதை நான் திறந்து கூட பார்க்கவில்லை. ஆழ்வார்ப்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலை, சிஐடி நகர், போயஸ் கார்டன் என மூன்று வீடுகளில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டு இருந்தது. மேலும், நெக்லஸ்கள், ஆரம் வைர நகைகள் உள்ளிட்ட 3 கோடி ரூபாய் நகைகள் திருட்டுப் போய் இருக்கிறது.

- Advertisement -

அப்போது ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி இருந்த ஈஸ்வரி என்பவர் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பண பரிவர்த்தனை நடந்திருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஈஸ்வரியை கைது செய்தனர். மேலும், ஈஸ்வரியை போலீசார் பல கோணங்களில் விசாரித்ததில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தான் மாடு போன்று உழைத்தாகவும் ஆனால் அவர் போதிய சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

போலீஸ் எவ்வளவு சம்பளம் ஐஸ்வர்யா கொடுத்தார்கள் என்று கேட்கையில் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் ஆனால் அந்த சம்பளம் போதுமானதாக இல்லாததினால் சிறிய சிறிய திருட்டுகளை ஐஸ்வர்யாவில் வீட்டில் செய்து வந்ததாக ஈஸ்வரி கூறினார். அதோடு இந்த திருட்டுகளை ஐஸ்வர்யா மற்றும் அவரது குடுமபம் கண்டுபிடிக்காத காரணத்தினால் நகைகளை திருட ஆரம்பித்து அந்த நகைகள் மூலம் வீடு கட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் இன்னும் கொஞ்சம் நாள் வீட்டில் இருந்திருந்தால் கண்டிப்பாக அதிகம் திருடியிருப்பேன் என்றும், ஐஸ்வர்யா குறைவான சம்பளம் கொடுத்தே நான் அவரின் வீட்டில் திருட என்னை தூண்டியது என்றும் தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் கடந்த சில நாட்களுக்கு வைரலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யாவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இன்று (மே 10) ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement