சின்னத்தம்பி வந்துவிட்டான் – இரண்டாம் திருமணத்திற்கு பின் பிறந்த இரண்டாம் குழந்தை – குஷியில் ரஜினி மகள்.

0
471
soundarya
- Advertisement -

ரஜினி மகள் சௌந்தர்யாவிற்கு இரண்டாம் குழந்தை பிறந்து இருக்கிறது. பல ஆண்டு காலமாக கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் தான். உலகம் முழுவதும் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உள்ளது. கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘அண்ணாத்த’ படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து ரஜினி அவர்கள் தலைவர் 169 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினிகாந்த்க்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா பிரபல நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

- Advertisement -

சௌந்தர்யாவின் முதல் திருமணம்:

சமீபத்தில் தான் ஐஸ்வர்யா-தனுஷ் பிரிய போவதாக அறிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் சினிமாவில் அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது, இயக்குனராக திகழ்கிறார். பின் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமான அளவில் திருமணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து சௌந்தர்யா முழு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

சௌந்தர்யாவின் விவாகரத்து:

பின் சவுந்தர்யா தன்னுடைய மகனைப் பெற்றெடுப்பதற்காக அம்மா வீட்டுக்கு வந்திருந்தார்.சில நாட்களிலில் சௌந்தர்யாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு வேத் என்று பெயர் வைத்தார்கள். ஏற்கனேவே சௌந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. பின் இதன் காரணமாக சௌந்தர்யா பெற்றோர் வீட்டிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார்.

-விளம்பரம்-

சௌந்தர்யா-விசாகன் திருமணம்:

பிறகு இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்ந்திருந்தனர். பின்னர் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதுக்கு பின் சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் ரஜினிகாந்த் வீட்டில் தான் வசித்து வந்தார். மேலும், சௌந்தர்யா விவாகரத்துக்கு பின் முழு கவனத்தையும் திரைப்படங்கள் இயக்குவதும், அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் தீவிரம் செலுத்தி வந்திருந்தார்.

சௌந்தர்யாவிற்கு பிறந்த மகன் :

இந்த சமயத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்,தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகன் ஆகிய இருவரும் காதலித்து வந்தார்கள். மேலும், இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தார்கள். இதை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் படு கோலாகலமாக நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் சௌந்தர்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘இறைவன் அருள் மற்றும் பெற்றோரின் ஆசீர்வாதத்தால் ஆண் குழந்தை பிறந்ததாகவும், தன்னுடைய மூத்த மகனுக்கு சின்னத்தம்பி வந்து விட்டதாகவும் ‘ கூறியுள்ளார்.

Advertisement