நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். சௌந்தர்யா தனது முதல் கணவர் அஸ்வின் ராம்குமாரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த பெப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார்.
சௌந்தர்யாக்கும் அஸ்வினுக்கு வேத் என்ற மகன் இருக்கிறான். அவருடனான புகைப்படத்தை எப்போதும் சௌந்தர்யா சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் இருப்பார். சமீபத்தில் சௌந்தர்யா தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த புகைப்படத்தில் சௌந்தர்யாவின் மகன் வேத் ஓவியம் வரைந்து அந்த ஓவியத்திற்கு வண்ணம் தேடுவதுபோல் உள்ளது. இப்பொது இருக்கும் நவீன
தொழில்நுட்பத்தில் இருந்து மகனை பாதுகாக்க இப்படி ஒரு வழியை எல்லாம் காண்பிப்பதாக அவர் பதிவு செய்துள்ளார்.
சௌந்தர்யா அவர்கள் பல படங்களை இயக்கியும், தயாரித்தும் இருக்கிறார். மேலும் தற்போது பொன்னியின் செல்வன் படத்தையும் தயாரிக்கிறார். அவரை போல அவரது மகனுக்கும் திறமை இருப்பதில் ஆசிரியம் இல்லை.