இறுதி வரை இருந்த கடவுள் நம்பிக்கை – சிகிச்சையின் போதும் கையில் ருத்திராட்சமாலையை கழட்டிடாத எஸ் பி பி- வீடியோ இதோ.

0
3088
spb
- Advertisement -

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி உடல்நலக் குறைவால் இன்று (செப்டம்பர் 25) காலமாய்யுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானதால் கடந்த 5-ம் தேதி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பாடகர் எஸ் பி பிக்கு திடீரென உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம்தெரிவித்து இருந்தது.

-விளம்பரம்-

அவரின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். அதே போல பாடகர் எஸ் பி பி கொரோனா தொற்றில் இருந்து மீண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ் பி பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பல்வேறு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிராத்தனை செய்து வந்தனர்.

- Advertisement -

மேலும், #Prayforspb என்ற ஹேஷ் டேக்கை கூட உருவாக்கி எஸ் பி பிகாக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை போட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் எஸ் பி பியின் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமா இருப்பதாக மருத்துவ நிர்வாகம் நேற்று அறிவித்த நிலையில் அவர் இன்று மதியம் 1.04 மணி மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவ மனை நிர்வாகம் அறிவித்து இருந்தது.

எஸ் பி பிக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருக்கிறது அவரது உடலுக்கு பல்வேறு பொது மக்களும் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், நாளை காலை செங்குன்றத்தில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் எஸ் பி பிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் கையில் ருத்ராட்ச மாலையை அணிந்திருக்கும் எஸ் பி பிசியோ தெரபிக்கான பயிற்சிகளை செய்கிறார். மேலும், அவரை உடன் இருக்கும் மருத்துவர்களும் உற்சாகப்படுத்தி பயிற்சியை செய்ய வைக்கின்றனர்.

Advertisement