ஐஸ்வர்யா ராயின் திருமண புடவை தங்கம், வைரத்தால் ஆனதா?- எவ்வளவு லட்சம் தெரியுமா? வாயை பிளந்த ரசிகர்கள்.

0
933
- Advertisement -

என்றென்றும் மக்கள் மனதில் இருந்து நீங்காத உலக அழகியாக இடம் பிடித்தவர் நம்ம ஐஸ்வர்யா ராய் தான். இவர் 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றவர். இவருடைய கண் அழகிற்கும், நடிப்பிற்கும் தற்போது கூட ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர். மேலும், இவர் 1997 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கிய “இருவர்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் இவர் பாலிவுட் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். பின் இவர் 2007 ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பட்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வந்தார். ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பட்சன் தம்பதியருக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார்.

- Advertisement -

ஐஸ்வர்யா ராய் மகள்:

அதோடு உலக அழகிகள் எவ்வளவு வந்தாலும் ஐஸ்வர்யா ராய் பிடித்திருக்கும் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. இந்த தலைமுறை ரசிகர்கள் கூட இவரது அழகை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று ஆணித்தனமாக கூற முடியும் . மேலும், நடிகை ஐஸ்வர்யா ராய் குழந்தை பிறந்த பிறகு அவ்வளவாக சினிமா பக்கம் வருவதில்லை. எப்போதும் அவர் தன் மகளுடன் நேரம் செலவிட்டு வருவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் வெளியே எங்கு சென்றாலும் தன்னுடைய மகளை கூட்டிக்கொண்டு தான் செல்கிறார்.

ஐஸ்வர்யா ராய் திருமணம்:

அதுவும் தன் மகளை கட்டி அணைத்துக் கொண்டு தான் செல்வார். அதுமட்டுமில்லாமல் இவர் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். இதனால் தன் மகளுடன் வெளியே செல்லும் புகைப்படம், வீடியோக்கள் என அனைத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். இப்படி ஒரு நிலையில் ஐஸ்வர்யாவின் திருமண புடவை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்கள் 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்களுடைய திருமணம் பயங்கர பிரம்மாண்டமாக நடந்தது. அதில் ஐஸ்வர்யா தங்க கலரில் திருமண புடவை அணிந்திருந்தார்.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா ராய் திருமண புடவையின் விலை:

அந்த புடவையின் விலை மட்டும் 75 லட்சத்திற்கு மேல் இருக்கும். தங்கம் மற்றும் வைர கற்களை வைத்து அந்த புடவையை டிசைன் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு ரசிகர்கள் பலரும் வாயைப் பிளந்து இவ்வளவா! என்று கேட்டு வருகிறார்கள். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ஆன ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வருடங்களாக உருவாகி வருகிறது. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்க முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம்:

சோழ மன்னர்களின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது தான் கல்கி. ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது மணிரத்தினம் தீவிரமாக இந்த படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா , அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குகிறார் மணிரத்தனம். இந்த படத்தில் நந்தி தேவி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பதாக தகவல் வெளிவந்து உள்ளது.

Advertisement