என்னதான் போதை தலைக்கேறும் அளவிற்கு குடித்திருந்தாலும், நீரில் மூழ்கினால் நமக்கு தெரியும் அளவிற்கு இருக்கும். குளிக்க வைக்கப்பட்டிருக்கும் பாத் டப்பும் அவ்வளவு ஆழமாக இருக்காது. இடுப்பளவு நீர் கூட இல்லதா அந்த குளியரை தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார் என்பது சாத்தியம் இல்லை.
நீச்சல் தெரியாதவன் கூட சில வினாடிகள் கடலிலும், ஆற்றிலும் தாக்குப்பிடிக்க முடியும். என்னதான் குடித்திருந்தாலும் ஒருவரால் மூன்றடி உள்ள பாத் டப்பில் மூழ்கி இருப்பதென்பது நம்பும் வகையில் இல்லை. ஒரு மனிதனால் மூச்சை அடக்கி சாக முடியாது என்பது அறிவியல் உண்மை.அப்படி இருக்க, அவர் போதையில் டப்பில் மூழ்கும் போது அவரால் திமிறி எழுந்து உட்காந்திருக்க முடியும், இல்லை என்றால் அவரால் அதிலிருந்து மீண்டு வந்திருக்க முடியும். நீரில் மூழ்கி உயிரிழக்கும் அளவிற்கு உள்ளுணர்வு இல்லமால்போகாது.
எது எப்படியோ இந்த மர்மத்தின் முடிச்சி இறந்த ஸ்ரீதேவி ஒருவருக்கு மட்டும் தான் தெரியும்




