இஷான் கட்டருக்கும் - ஜான்விக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக ஏற்கனவே பலமுறை கிசுகிசுக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.இருவரும் நீண்டகாலமாக ஒன்றாக பலஇடங்களுக்கு சென்றுவருவதே இந்த கிசுகிசுவிற்கு காரணம்.
இந்நிலையில் இஷான் கட்டரும் ஜான்வியும் சமீபத்தில் ஒன்றாக வெளியே சென்றிருந்தபோது திடீரென பத்திரிகையாளர்கள் இருவரையும் புகைப்படம் எடுக்க முயற்சித்தபோது ஜான்வி அங்கிருந்து திரும்பி ஓடிச்சென்று காரின் அருகில் ஒளிந்துகொண்டார்.மறுபுறம் இஷான் கட்டரும் முகத்தை மறைத்துக்கொண்டே வேகமாக நடந்துசென்றார்.
பின்னர் சிறிதுநேரம் கழித்தே இருவரும் முகத்தை மறைத்தபடி சென்றனர்.பத்திரிகையாளர்களை கண்டவுடன் இருவரும் பயந்துஓடும் புகைப்படங்கள் தற்போது வெளியிகியுள்ளன.தேவையில்லாம ஏன் இருவரும் பத்திரிகையாளர்களை கண்டு ஓடி ஒளிய வேண்டுமென்று பலரும் தற்போது கேள்வியெழுப்பி வருகின்றனர்.




