CWCயில் இருந்து மணிமேகலை விலகி ஒரு வாரம் கழித்து ஸ்ருஷ்டி போட்ட உருக்கமான பதிவு.

0
414
Srusti
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
manimegalai

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணமே கோமாளிகள் தான். அதிலும் இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, பாலாவிற்கு அடுத்தபடியாக மணிமேகலை தான் காமெடியில் கலக்கி வந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி இருப்பதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

வெளியேறிய மணிமேகலை :

இதுகுறித்து அறிவித்து இருந்த அவர் ‘ ‘இன்று குக் வித் கோமாளியில் என்னுடைய கடைசி எபிசோடு. ‘நான் வரமாட்டேன்’ என நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன்.2019ல் தொடங்கிய முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோமாளிக்காக அதிக அளவு அன்பை பொழிந்துகொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன்.

குக் வித் கோமாளியின் உங்களை entertain செய்ய கொஞ்சம் justice செய்திருக்கிறேன். உங்களிடம் இருந்து எதிர்பார்க்காத அளவுக்கு அன்பு கிடைத்தது, அது நான் செய்யும் மற்ற விஷயங்களிலும் இருக்கும் என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் ஏற்கனவே பாலா இல்லை என்பதால் இந்த சீசன் கொஞ்சம் போராக சென்று கொண்டிருக்கிறது. தற்போது நீங்களும் சென்று விட்டால் எப்படி என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகிய ஒரு வாரம் கழித்து மணிமேகலைக்கு உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் ஸ்ருஷ்டி. அதில் ‘ஹாய் மணி, முதலில் நான் உங்களை செட்டில் மிஸ் செய்கிறேன், இரண்டாம் நாள் படப்பிடிப்பில் நான் சொன்னது உங்களுக்கு நினைவிருந்தால், பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக நிகழ்ச்சியில் அனைவரையும் விட உயர்ந்து நிற்கும் ஒரு பெண்மணி நீங்கள். உங்கள் நடிப்பை நான் உண்மையிலேயே ரசித்தேன். நீங்கள் ஒருஅழகிய பொம்மை, தூய்மையான நபர். நான் உங்களுடன் cwc செட்டை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், நான் அதை மிகவும் விரும்பினேன்.

நாங்கள் கடைசி நாளில் நானே வருவேன் கெட்டப்பில் வந்த போது உன்னுடன் ஜோடி சேர வேண்டும் என்று ரகசியாக பிரார்த்தனை கூட செய்தேன். உங்களை பற்றி நிறைய தெரிந்துகொள்ள அதிகம் சிரித்து பேச வேண்டும் என்று நான் உங்களுடன் அதிகம் நேரத்தை செலவழித்தேன். உங்கள் வாழ்வில் நீ எடுக்க இருக்கும் அணைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற என்னுடைய அன்பை அனுப்புகிறேன்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement