பல கோடி வசூலித்த தன் படத்தை விமர்சித்துள்ள சொந்த மாநிலத்தவர் – ராஜமௌலி வேதனை.

0
1963
- Advertisement -

பாகுபலி படத்தை சொந்த மாநில மக்களே விமர்சித்ததால் ராஜமௌலி மனவேதனையில் இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமவுலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவன் முதன் முதலாக ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது மாவீரன் படம் தான். இந்த படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இவர் நான் ஈ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின் இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது பாகுபலி திரைப்படம் தான்.

- Advertisement -

பாகுபலி படம்:

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக இருந்தது. மேலும், முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் RRR. இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும்.

RRR படம்:

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு வெளியாகி இருந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து ரசிகர்கள் பலரும் ராஜமவுலி ஒரு வரலாற்று, புராணங்களை இந்த காலத்திற்கு ஏற்ப படங்களாக எடுங்கள் என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். அதுக்கேற்றவாறு தற்போது ராஜமவுலி அவர்கள் மகாபாரத கதையை 10 பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ராஜமௌலி எடுக்கும் படம்:

இது குறித்து வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு ராஜமவுலி கூறி இருந்தது, மகாபாரதத்திற்கு நான் எழுதும் கதாபாத்திரங்கள் நீங்கள் முன்பு பார்த்தது, படித்தது போல் இருக்காது. ஆனால், கதையில் மாற்றமும் இருக்காது. மேம்படுத்தப்படும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகள் மேம்படுத்தப்படும். மகாபாரதத்தை என்னுடைய பாதையில் எடுப்பேன். மகாபாரதத்தின் திரைகதையை நான் எழுதிய பிறகு என்னுடைய கதாபாத்திரங்களை முடிவு செய்கிறேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜமவுலி கலந்து கொண்டிருந்தார்.

bahubali

பாகுபலி குறித்து சொன்னது:

அதில் அவர் பாகுபலி படம் குறித்து கூறியிருந்தது, பாகுபலி முதல் பாகத்திற்கு வந்த விமர்சனங்கள் எல்லாம் எதிர்மறையாகவே இருந்தது. பாகுபலி படம் தமிழ்நாடு, கேரளா, வட இந்தியா, அமெரிக்கா, துபாய் போன்ற பல இடங்களில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால், ஆந்திரா- தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் மோசமான படம். இந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது என்றெல்லாம் பேசி இருந்தார்கள். மூன்று வருடங்களாக என்னை ஆதரித்த தயாரிப்பாளர் நினைத்து நான் வருத்தப்பட்டேன். காரணம், அவர் இந்த படத்துக்காக நிறைய பணம் செலவிட்டார். அந்த நேரத்தில் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என்று வேதனையில் கூறியிருக்கிறார்.

Advertisement