கொரோனா வைரஸ் காரணத்தால் லாக்டவுன் அறிவிப்புக்கு முன்பு, சிம்பு “மாநாடு ” படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்றார். படத்தின் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாச்சி, இயக்குனர் வெங்கட் பிரபு போன்றவர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பின் ஒரு வருடத்திற்கும் மேலாக, எஸ்.டி.ஆரின் ஒத்துழைப்பு இல்லாததால் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியவில்லை.
மேலும், படத்தின் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பல்வேறு பொது இடங்களில் சிம்பு முறையான தேதிகளை வழங்கவில்லை என்றும் கொடுக்கப்பட்ட தேதிகளில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும் புகார் கூறினார். இருப்பினும், சிம்புவின் தாயார் அறிவுறுத்தலின் பெயரில் நடிகர் சிம்பு பயபக்தியோடு சபரி மலைக்கு மாலையெல்லாம் போட்ட பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அதே போல சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வந்து விடுகிறார் என்று கூறி சிம்புவை பாராட்டினார் சுரேஷ் காமாட்சி. ஆனால், யார் கண்ணு வைத்தது போல கொரோனா பிரச்சனை காரணமாக மற்ற படங்களை போல மாநாடு படத்தின் படபிடிப்பும் நிறுத்த பட்டுள்ளது. தற்போது வீட்டில் இருந்து வரும் சிம்பு அடிக்கடி வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் சிம்பு, vtv கணேஷ் முன்னிலையில் வீட்டில் சமைக்கு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ‘பெண்கள் என்றால் சமைப்பதற்கு மட்டும் தானா. நான் என்னுடைய மனைவி எனக்கு வேலை செய்யவா என்னை திருணம் செய்து கொள்வார்கள். அவங்க என் லைப்ல ஆதரிக்க வருகிறாள், ஒரு வாழ்க்கைத் துணையை எவ்வாறு நடத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவளை ஒரு பணிப்பெண்ணாக நடத்த, நான் உன்னைப் போன்றவன் அல்ல’