பிரபல பாடகி சுச்சித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பல நடிகர் நடிகைகளின் புகைபடங்கள் மட்டும் வீடியோக்கள் வெளியானது. ஆனால், தன்னுடைய அக்கௌன்ட் ஹேக் செய்யப்பட்டது எனவும், அப்படி வெளியிடுவது தான் இல்லை எனவும் சுசித்ரா கூறி வந்தார். அந்த சமயத்தில் பல நாட்கள் அந்த சுச்சி லீக்ஸ் தான் ட்ரென்டாக இருந்தது.
பின்னர், சுச்சி லீக்கில் வெளியான போட்டோக்கள் தங்களுடையது இல்லை அவை மார்ப்பிங் செய்யப்பட்டது என நடிகைகள் மறுத்து வந்தனர்.
அந்த சுச்சி லீக்கில் நடிகை அனுயாவும் மாட்டி இருந்தார். அவரது போட்டோவும் வெளியானது. தற்போது அந்த போட்டோ என்னுடையது இல்லை , அது மார்ப்பிங் செய்யப்பட்டது எனவும் கூறியுள்ளார் அனுயா. மேலும், அதனை செய்தது யார் என கண்டு பிடிக்க சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார் அனுயா.




