தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் சுச்சி லீக்ஸ் போய் ஸ்ரீ லீக்ஸ் வந்தது என்றும் பல விமர்சனம் செய்து வந்தார்கள் நெட்டிசன்கள். சுசித்ரா ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார். அதுவும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களையும் பாடியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து “சுசி லீக்ஸ்” என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, திரிஷா, ஆண்ட்ரியா, சின்மயி, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் சினிமா திரையுலகமே அதிர்ந்து போனது. இதையடுத்து பாடகி சுசித்ரா கூறியது, தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து உள்ளார்கள்.
அதிலிருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள் என்று கூறி இருந்தார். மேலும்,அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து வந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் தன்னுடைய விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விட்டு விலகி அடையாரில் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் சுசித்ரா தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார். இதனால் தனது சமூக வலைதளத்தில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார். மேலும், அந்த பதிவில் சுதந்திர தின வாழ்த்தையும் கூறி இருந்தார். இதை கண்ட பலர், Birthday கொண்டாடுங்க… குடிங்க, அதை social mediaல share பண்றதெல்லாம் உங்க விருப்பம்.. ஆனா Happy independence dayனு tag பண்ணீங்க ஒரு பாருங்க… உங்களுக்கு அறிவே இல்லையா என்று பதிவிட்டுள்ளனர்.