பிரியா பவானி, அனிதா சம்பத்தை தொடர்ந்து இப்போ இவங்க தான் வைரல்.

0
21945
kanmani
- Advertisement -

சமீப காலமாகவே வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகளுக்கு நிகராக தொலைக்காட்சித் தொகுப்பாளினிக்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தொலைக்காட்சி பொறுத்த வரை எப்போதும் ஒரு சில தொகுப்பாளனிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கும். பெப்சி உமா, டிடி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போது சன் டிவி செய்தி வாசிப்பாளராக கலக்கி கொண்டு இருப்பவர் கண்மணி. தூர்தர்ஷன் செய்திகளுக்குப் பிறகு சன் டிவி செய்திகளுக்குத் தான் மக்கள் மத்தியில் மவுசு அதிகம் இருந்தது. பல ஆண்டு காலமாக சன் டிவியில் நியூஸ் ஒளிபரப்பப்படுகிறது.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாக செய்தி வாசிக்கும் செய்தி வாசிப்பாளர்க்கு என்று ஒரு தனி ரசிகர் படை சேருகிறது. அதில் நியூஸ் ரீடர் அனிதா சம்பத் அவர்கள் தன்னுடைய வசீகரமான அழகளாலும், குரலாலும் செய்தி வாசிப்பாளராக சன் டிவியில் செய்திகள் வசித்து வருகிறார்.

- Advertisement -

இவர் நியூஸ் வாசிக்க தொடங்கியதில் இருந்து இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் தற்போது சன் டிவியில் புதியதாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறார். தற்போது தமிழக இளைஞர்கள் மத்தியில் அவர் தான் ட்ரெண்ட்.

அந்த செய்தி வாசிப்பாளரின் அவர் கண்மணி. ப்ரியா பவானி ஷங்கர், அனிதா சம்பத்தை தொடர்ந்து தற்போது கண்மணி செய்தி வாசிப்பின் மூலம் தனெக்கென ஒரு இளைஞர்கள் கூட்டத்தை சேர்த்தவர் கண்மணி. தற்போது இவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement