சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் “பேட்ட” படத்தையும், விஜய் நடித்து வரும் “சர்கார்” படத்தையும் தயாரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் “சூர்யா 38” படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் கே வி ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷெயிஷா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் ஆர்யா , மோகன்லால், பொம்மன் இரானி போன்றவர்களும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 38 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறுப்படுகிறது. அந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளார் என்றும் பெரும்பாலும் “சிங்கம் ” படத்தின் 4 ஆம் பாகமாக இந்த படம் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.