தமிழ் கடவுள் முருகனில் பார்வதி, கண்மணியில் சுகன்யாவாக வந்த பிரியாவிற்கு இவ்வளவு பெரிய மகளா.

0
2161
priya
- Advertisement -

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையானவர்கள் பல பேர் இருக்கிறார்கள். பிரியா பவானி சங்கர், நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா, அனிதா சம்பத் இப்படி சொல்லிகொண்டே போகலாம். அந்த வகையில் இவரும் ஒருவர் தான். விஜய் டீவியில் ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் தொடரில் பார்வதி கேரக்டரில் நடித்து இருந்தவர் ப்ரியா. இவர்இந்த தொடருக்கு முன்னரே சீரியல்களில் நடித்துள்ளார். இவருடைய முழு பெயர் ப்ரியா பிரின்ஸ். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் ஜர்னலிசம் படித்தவர். தமிழ் கடவுள் முருகன் நாடகத்தில் நடிக்கும் முன்னர் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் விஜய் டீவியில் ஒளிபரப்பான இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார். அதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் பல சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் பெற்றார்.தமிழ் கடவுள் முருகன் சீரியலுக்கு வைத்த ஆடிசனில் மூன்று முறை பங்கேற்றார். அந்த மூன்று முறையும் முதல் ஆளாக தேர்வானார். இதன் காரணமாக பார்வதி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையும் பாருங்க : டைரக்டர் லோகநாதன், கிளைமாக்ஸ்ல இத சொதப்பிட்டீங்க, இப்படி பண்ணி இருக்கலாம் – ரௌடி பேபி சூர்யாவின் மாஸ்டர் பட விமர்சனம்.

- Advertisement -

தமிழ் கடவுள் முருகன் தொடரில் பார்வதி கேரக்டரில் நடிப்பதற்காக 5 கிலோ வரை உடல் எடையை குறைத்து இருந்தார் பிரியா. அந்த தொடருக்கு பின்னர் மாப்பிள்ளை, பொன்மகள் வந்தால், கண்மணி போன்ற பல சீரியல்களில் நடித்துள்ள பிரியா ரஜினியின் 2.0, சூர்யாவின் ‘பசங்க 2’ போன்ற படங்களில் கூட நடித்து இருக்கிறார்.

அதே போல கடந்த ஆண்டு ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். பிரியா. தற்போது 32 வயதாகும் இவர் சமீபத்தில் தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இவருக்கும் இவ்வளவு பெரிய மகளா என்று வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement